Saturday, August 10, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 பூ ஒன்று புயலாகவும் மாறுமா?

புரிந்தவர்களுக்கு பெண்மையாகவும் தோன்றுமா? 

காதலியை கவர பரிசாகவும் இருக்குமா?

கடற்கரையில் நின்ற போதும் கரையில் இருப்பவரையும் நோக்குமா?

 தேடியது அடையப் பெறாமல் தீண்டினாள் கடலை

முத்தமிட்டாள் கடல் அலையை

கடலும் கரை சேர்த்தது 

தான் காதலுக்கு எதிரியல்ல என்பதை வலியுறுத்தியே!

வானமும் கடலும் காதலிப்பதால் வானின் நீலம் கடலில்

கடலின் வெண்மை வானத்தில் வெண்மேக் கூட்டமாய்


 மௌனம் உன்னை திருத்தும்


எதிர்மறையாக சிந்திப்பதிலிருந்து


அதிகமாக பேசுவதிலிருந்து


இன்னும் ஆழமாய் சிந்திக்க வேண்டி


தெளிவான கருத்தை முன்னிறுத்த வேண்டி


பொறுமையை கடைபிடிக்க வேண்டி


இது யாவும் ஆலோசனையே அடுத்துவருக்காக நம்மிடம் சொந்தமாக பிறந்தது, பிறப்பது

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...