எலும்பில்லாத நாவின் விளைவால் எலும்புக் கூடாய் மாறியது தேகம் மட்டுமல்ல மனமும் தான்
அப்பா
அன்பின் அடையாளம் மட்டுமல்ல
அறிவின் அடையாளம் மட்டுமல்ல
தெளிவின் அடையாளம் மட்டுமல்ல
உழைப்பின் அடையாளம் மட்டுமல்ல
தேகத்தின் மெலிவிலும் அவர் நம் பாசத்தின் அடையாளம்
நான்கு கால்கள் கொண்ட நாற்காலியை விட உறுதியானது இந்த இரண்டு கால்கள் உள்ள எலும்பு தேகம், தந்தை எனும் வடிவில்
எலும்பு மட்டுமே உள்ளவனின் உழைப்பு எலும்பில்லாத பலரின் வார்த்தைக்கு செவி மடுக்காததால் உயர்ந்து நிற்கிறது
தேகம் மெலிந்தாலும்
மனம் களைத்தாலும்
வயிறு பசித்தாலும்
உடை மறுத்தாலும்
நடை மறந்தாலும்
உணவு சிறுத்தாலும்
சினேகம் சிதறினாலும்
வரவு குறைந்தாலும்
தனிமை கொன்றாலும்
துணையின் பிரிவினாலும்
பார்வையில் கோலாறானாலும்
வயது முதிர்ந்தாலும்
உழைப்பு நின்றாலும்
அவர் உழைத்த கால்களில் நிற்கும் தூண்களே நாம்
அவரை தாங்கிப் பிடிக்க நினைக்கும் ஓர் உயிர்
அவரே அப்பா எனும் விதை

No comments:
Post a Comment