குழந்தை பருவத்தில் இயல்பிற்கு எதிரான குணத்தை புகுத்தி சிறகை ஒடிப்பதும்
பள்ளிப் பருவத்தில் பிடித்த பாடத்தை படிக்க முடியா வண்ணம் சிறகை ஒடிப்பதும்
வளர் பருவத்தில் தனக்கு நடக்காமல் போன பருவத்து ஆசைகளை திணித்து சிறகை ஒடிப்பதும்
விடலை பருவத்தில் காதல் எனும் சிறகை தேவையில்லாமல் ஒடிப்பதும்
கற்ற கல்விக்கான வேலை தேடிக் கொள்ள அவகாசம் கொடுக்காமல் சிறகை ஒடிப்பதும்
மணமான பின் சுதந்திரத்தை படித்து சிறகை ஒடிப்பதும்
ஒடிந்து போன பல்லியின் வால் மீண்டும் வளர்வது போல ஆசை சிறகுகள் துளிர அதை மீண்டும் மீண்டும் வெட்டி அறுக்கும் உரிமையை அடுத்தவருக்கு யார் கொடுத்தது?
சிறகு ஒடிந்த பறவையும் மேலெழும்பி பறக்கும் தன் தீவிர முயற்சியால்
கத்திரிக்கோலின் முனை கூர்மையாக்கப் படுகிறது பரந்து விரிந்த சிறகில்,
பாரம் தாங்காமல் தவித்த பறவைக்கு தேவை இலகுவான சிறகு, அது சிறகை வெட்டுவதால் மட்டுமே சாத்தியம்

No comments:
Post a Comment