இரவின் மடியில்
பகலின் நிழலில்
நிலவின் ஒளியில்
கடலின் அலையில்
நீரலையின் இசையில்
மணலின் குளுமையில்
காற்றின் வேகத்தில்
வானத்தின் நடிப்பில்
காதலின் பிடியில்
இளமையின் ஆனந்தத்தில்
படகின் பதிவில்
ஓர் ஆட்டம் ஆங்கே
எதற்கும் அஞ்சா
நெஞ்சங்கள் இரண்டு
எவரும் காணா
குதூகலம் கொண்டு
பிறந்த மழலையின்
பேச்சு போலே
வார்த்தைகள் வர மறுத்து நின்றாலும்
மறைத்து வைக்க
முடியாத காதல்
அரங்கேறும் நேரமும் இதுவோ?
தனியே வந்த கூட்டனி
திரும்பி செல்லும் போது
பல நினைவுகளை
நெஞ்சில் சுமந்து
பிரிவு கொள்ளா
நிலையோடு வாழ்ந்தால்
சுகமே!
என்றும் இணையோடு அசை போட

No comments:
Post a Comment