Friday, August 23, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


இரவின் மடியில்

பகலின் நிழலில் 

நிலவின் ஒளியில்

கடலின் அலையில் 

நீரலையின் இசையில்

மணலின் குளுமையில்

காற்றின் வேகத்தில்

வானத்தின் நடிப்பில்

காதலின் பிடியில்

இளமையின் ஆனந்தத்தில்

படகின் பதிவில்

ஓர் ஆட்டம் ஆங்கே

எதற்கும் அஞ்சா

நெஞ்சங்கள் இரண்டு

எவரும் காணா 

குதூகலம் கொண்டு

பிறந்த மழலையின்

பேச்சு போலே

வார்த்தைகள் வர மறுத்து நின்றாலும்

மறைத்து வைக்க

முடியாத காதல்

அரங்கேறும் நேரமும் இதுவோ?

தனியே வந்த கூட்டனி 

திரும்பி செல்லும் போது

பல நினைவுகளை 

நெஞ்சில் சுமந்து

பிரிவு கொள்ளா

நிலையோடு வாழ்ந்தால்

சுகமே!

என்றும் இணையோடு அசை போட


 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...