Thursday, August 22, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


ஒற்றை விரல் பற்றுவதில் இல்லை ஆனந்தம்,

பற்றிக் கொண்டது விட்டு விடாமல் காப்பதே ஆனந்தம்

உறவு மேம்பட தேவை

அன்பும் சகிப்புத் தன்மையும்


இந்த பிஞ்சு விரல்களை பற்ற நான் கொண்ட தவமும்

பிறரின் தேவையற்ற பேச்சுக்களும் என்னை நிலைகுலைய செய்ய

என் அகப்பையில் உனை நான் கொண்ட போது கூட மௌனமே விடையாய் இருந்தேன்

உன் ஆவி இந்த பூமியை அடையும் வரை

நிலவின் ஒளி போல் நீ என் வீட்டுத் தோட்டத்தை அலங்கரித்த போதும் உனை தீண்டவும்

மெய் மறந்தேன்

எதன் பலனாய் எது என்று தெரியாத போதும் ராசாவின் இதழை கொண்டது உன் பிஞ்சு விரல்கள்

எட்டி எட்டி நீ வைக்கும் நடைக்காக காத்திருந்த காலம் கை கூடியதும்

எட்ட நின்று உனை ரசிக்கவும் நான் படித்தேனே!

பெரு வினா கூட என்னில் சிறு வினாவாகியது

பெறுவது கடினம் என்பது பெற்றவருக்கே தெரியும்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...