இதில் எது ஓவியம்
கண்ணில் ஓடும் குதிரையா?
குதிரையின் பிடரியின் வடிவம் கண்ணா?
கண் கொண்டு நட்சத்திரம் காணா வேளையில் கண்ணிலும் நட்சத்திரம் ஒளிர்கிறது
அறிவியலின் விந்தையை அறிவு பயன்படுத்தியது
மண்ணில் ஓடும் குதிரை இங்கு கண்ணில்
கண் வடிக்கும் நீரோ மண்ணில்
ஓட்டப் பந்தயத்தில் இருவர்,
ஒருவர் கால்களை நம்பி
மற்றொருவர் கண்களை நம்பி
நாம் அவர்களின் கலையை கொண்டோம் விரும்பி

No comments:
Post a Comment