Wednesday, August 14, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 கண்களில் மயங்கியது நாசியில் மலர்ந்தது

 காத்திருந்து பூத்தது தங்கத்தின் விலை சரிவால்

 செவியின் இரு துளைகளுக்கு இது போட்டியோ? 

ஒற்றைக்கல் மூக்குத்தியே அடுத்தவரை தன் பக்கம் ஈர்க்கும் போது இதுவும் அழகே!

துளைக்கும் போது அழுத்தம் இருந்தாலும் காணும் போது அதன் அழகால் ஆனந்தமே!

படைப்பவனின் ரசனைக்கு இதுவும் ஓர் உதாரணமே!

சத்தமில்லாத வைப்பு தொகையோ இது?

ஒளிரும் கண்களுக்கு கீழே மிளிரும் மாயம் என்ன? அணிந்தவனை விட காண்பவனுக்கே காட்சி அழகு

ஒருவேளை வருத்தத்தில் 

சிந்தும் கண்ணீரும் இங்கே பட்டு செல்வதால் நாசியும் அறியும் அணிபவனின் மன வேதனையை

எத்துணை கொண்டாலும் இத்துணையும் அழகே பெண்ணிற்கு

அணிய மறுத்து அடம் பிடித்தாலும் ஆசை வந்து மெல்ல மனதை வருட இறுதியில் அதுவும் அடைக்கலம் பெண்ணிடம்

தேவையில்லாத எதுவும் இல்லை நம்மிடம் 

நம்மை அழகாய் நேர்த்தியாய் உயர்த்திக் காட்டவே நம் கலாச்சாரம்

 தந்திர பார்வைக்கு மத்தியில் ஓர் மந்திரக் கல் நாசியில்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...