தணியா தாகத்தில் இருந்து
அறிவுப் பசியால் தானே வளர்ந்து
அதீத புத்தியுடன் கூர்ந்து
அடுத்தவரின் பார்வையும் அறிந்து
எதிலும் தன் திறமையை சார்ந்து
எறும்பு போல் காலத்திற்கேற்ப ஊர்ந்து
அழகு வார்த்தைகள் மிகுந்து
நிலவு போல தெளிவாய் மிளிர்ந்து
கொண்ட அனுபவத்தில் சிறந்து
உறவிற்கு கை கொடுத்து சேர்ந்து
அதனின் தேவையில்லா குற்றங்கள் எழுந்து
நீயும் தன்னம்பிக்கை இழந்து
சுய சோதனையில் நீயும் கரைந்து
குழப்பத்தில் மனம் சோர்ந்து
காலத்தால் குழப்பங்கள் எளிதில் தீர்ந்து
பால் போன்ற உன் மனதை திறந்து
சொல்லும் செயலும் தெளிந்து
என்றும் மனம் மலர தனிமையே மருந்து
நீயம் தவறென்றால் உனை மாற்றி திருந்து
நிலையில்லா ஆசையை என்றும் துறந்து
வலிமையுள்ள துக்கத்தையும் இயல்பில் மறந்து
பலகலையும் உலகில் உண்டென தெரிந்து
மாசில்லாமல் அவற்றைக் கற்று தேர்ந்து
வானில் புள் போல் பறந்து
பூமி பந்தில் ஆனந்தமாய் பரந்து
பிறரின் தேவைக்கு கபடமில்லாமல் வரிந்து
என்றும் உனக்கான அடையாளம் பெற உடலால் வருந்து
எப்போதும் உன் ஆளுமையில் விரிந்து
சுலபமாய் கைப்பற்ற கிடைக்கும் விருந்து
என்றும் எண்ணத்தில் புதிதாய் பிறந்து
நேர்மறை சிந்தனை மட்டுமே சுரந்து
எந்நாளும் மனதில் மகிழ்ச்சி தேனை இன்பமாய் அருந்து

No comments:
Post a Comment