Friday, August 9, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 சுமையை சுமக்க கல் போல் உறுதியான மனிதன், அவன் கையில் ஓர் துணியும் போதும்

 துணியும் துணிவும், துணையும் இருந்தால் பாறை கல் என்ன துளி விஷம் கூட தூளியில் உல்லாசமாய் உறங்க வைக்கும்

 குடும்பத்தை தாங்கும் பாரத்தை விடவா வலியது இந்த பாறை


இப்படிக்கு

நடுத்தர வர்க்க இளைஞன்


 கஷ்டப்பட்டு உழைப்பில் கிடைத்த செல்வத்தை 

சாராயக் கடையில் இழக்கும் அவலம் இங்கே

இழப்பீடு தொகை பெரியது என்பதாலோ 

ஏனோ அவனும் தன் உழைப்பை அங்கே

 தொலைத்தான் 

ஆயுள் முழுவதும் உழைத்து பெறாத பணத்தை 

தன் உயிர் மாய்த்து குடும்பத்திற்காக 

 கிடைக்க செய்தான். 

அப்படி உயிர் விட்டவனுக்கும் மாலையும் மரியாதையும்

 வேண்டும் என்று வலியுறுத்தும் கட்சிகள்  

இருக்கும் வரையில் ஏழையின் உயிர், பணத்தின் முன் அற்பமே!

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...