Tuesday, August 27, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


மீனின் கண்ணீரும் கரிக்குமோ?

பூமியில் உள்ள மனிதனுக்கே கண்ணீர் கரிக்கிறது என்றால் கடலில் வாழும் மீன் எம்மாத்திரம்?

 வறண்ட பாலையிலும் சுரக்கும் குளம்

அதுவே மீன் குஞ்சுகளுக்கு வாழும் இடம்

 கண்ணீரில் நீர் இருப்பதால் தான் ஏனோ கண்ணீரிலும் ஓர் வாழ்வு

தாயின் கண் நீரிலும் ஓர் புது வாழ்வு

ஓர் தாயின் தியாகம் தன் குஞ்சுகளுக்கு மட்டுமல்ல, நீந்த தெரிந்த எவருக்குமே

கரை புரண்டு ஓடினாலும் வரும் தண்ணீர் பஞ்சம் ஆங்கே


தானாய் வரும் கண்ணீரை

திரை கொண்டு மூடவும் முடியாதே


தண்ணீர் உடல் தாகம் தணிக்கும்

கண்ணீர் மன சோர்வு தீர்க்கும்


தண்ணீர் உயிர் வாழ வைக்கும்

கண்ணீர் உயிர் நீத்த பின் உயிர்க்கும்


தண்ணீரும் கண்ணீரும் இயல்பில் வேறென்றாலும் அடிப்படையில் வாழ்வை எதிர்நோக்கவே

மழை நீர் எல்லாம் வடிகால் இல்லாமல் நேரே கடலில் கலந்ததால் வந்தது நீர் வறட்சி, மீனும் தத்தளித்தது

தன் குஞ்சுகளை காப்பாற்ற தன் பெருகும் கண்ணீரை வடித்ததோ?

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...