Friday, August 30, 2024

பழமை மறக்கா புதுமை by Vidhya Nivash

 


பலரின் குருதி வியர்வையாக வடிய நிலத்தில் விளைந்த பொன்மணிகளை சேமித்து வைத்த அட்சய பாத்திரம். 

இருட்டில், வீட்டின் கடைசி அறையில் பொக்கிஷசமாக பல தலைமுறை கண்ட புதையல்.

இன்று புதுமையில் பழமை வீட்டின் முன் அலங்கரிக்க அல்ல.பூமியில் விளைந்ததை சுமந்த கலம் இன்று வானில் இருந்து சிந்தும் பொன்துளியை சேமிக்கும் மழைநீர் தொட்டி.

சேமிப்பின் அடையாளம் மண்ணில் விண்ணில் சிதறியன காக்கும் பூதம் இந்த தானியக்குதிர்.

மண்கலம் பொன்கலம் போல் மின்னுதே!


1 comment:

  1. சிறப்பு. முற்றிலும் உண்மையான கருத்து வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...