Vidhya Nivash விதைத்த விதை முளைக்காவிட்டாலும் விதைக்க மறக்காதே
Veena Shankar: பிறப்பு எனும் விதையின் உந்துதலும்
பிள்ளை எனும் மழலையின் தேடலும் ஒன்றே!
சரியான விதையே முடிவு செய்யும் பலன் தரும் செடியை ,
தேடிய விதை கிடைக்காமல் அறிவியலின் உதவியால் ஒளிந்திருந்த விதையை உயிருக்குள்ளே தேட,
அது கிடைத்ததும்
கருப்பை எனும் மண்ணில் ஊன்றி வைக்க ,
மண்ணில் இட்ட விதைக்கு நீருற்றுவது போல
ஏந்தும் தாய் தன் அகத்தில் உள்ள சிசுவிற்கு உணவினை மறைமுகமாய் ஊட்ட,
விதை செழிக்க வேண்டி மண்ணும் கூடுதல் உரமிட்டுக் கொள்ள, சிசுவிற்கோ தன் வளையோசையை இசைத்து புத்துணர்ச்சி கொடுக்க,
செடி தள்ளாடாமல் வளர ஊன்றும் கோல் போல சிசுவின் பிறப்பிற்கு பின்
பாசம் எனும் கோலால் தாங்கி பிடிக்க,
காற்றிற்கேற்ப ஆடும் செடியின் ஆட்டமும்
மழலை செல்வத்தின் விளையாட்டும் என்றும் நினைவே!
செடியும் வளர்ச்சி பெற்று விருட்சம் ஆவது போல மழலையும் உருப்பெற்று பருவம் வர ,
தேவை கவனம் செடிக்கு விருட்சம் ஆகும் வரை,
மனம் கோணாமல் பிள்ளையை காக்க,
விருட்சம் பலன் தருவது போல்
பெற்றப் பிள்ளையும் நிழலாய் மாற,
விருட்சமும் இலையுதிர் காலத்தில் உதிர்க்கும் இலை போல,
தாயவளை பிள்ளையும் தனியே தவிக்க விட்டாலும்
மீண்டும் துளிர்க்கும் மரம் போல
தாயானவள் ஒட்டிக் கொண்டே வாழத் துடிப்பாள் உற்றத் துணையோடு, பிள்ளையும்
உண்மையில் நிழல் தரும் தரு என்பதால்
Veena Shankar: விதை விருட்சம் ஆவது எப்போது?
காலம் பதில் சொல்லுமே!
சரியான விதை
தரமான உரம்
தேவையான பராமரிப்பு
மெய்யான மழை
உண்டெனில்
சுவாசிக்கும் விருட்சமுமே!
Vidhya Nivash: விதை வளர்ந்தாலும் அதன் வளர்ச்சியை தடுக்கும் களையாக இல்லாமல் இருக்க விதை விதைக்கிறேன் .
மகிழ்ச்சி,அமைதி,முயற்சி இவற்றை தொடர விதை விதைக்கிறேன்.
Veena Shankar: ஓர் விதையில் விருட்சம் ஒளிந்துள்ளது போல,
உயிரும் உணர்வும் உண்டு அதனுள்ளே
உயிர் பெற்று விதையும்
நிலைத்த பின் அது
செய்யும் தியாகமும்
நாம் உயிர் வாழ தானே!
உண்பதும் காணுவதும் அன்றி
அதன் வளர்ச்சியும் மர்மமே!
எதுவும் பிரம்மிப்பே இவ்வுலகில் !
உலகமத்தை தாங்குவது ஓர் விதையா?
உந்துதல் இல்லாமல் யாதும் பிறக்காது என்பதும் நிஜமே!
மண்ணின் பிரசவம்
இங்கே சப்தமில்லாமல்
நமக்கு மாறியது கடவுளின் பிரசாதமாய் .
Veena Shankar: விதையில்லாமல் பிறப்பு கிடையாது
விதையாய் நான் இல்லாவிட்டாலும்
அதனடியில் வளரும் வேராக இருக்க நினைக்கிறேன்
இல்லையென்றால்
அதன் மேல் வளரும் கிளையாக இருக்க விழைகிறேன்
ஒரு கால் அதுவும்
இல்லையென்றால்
அதனின் பிறக்கும்
பூவாகவும் காயாகவும்
கனியாகவும் உருபெற ஆவலே!
இவ்வேதும் நடக்கா சூழலில் மறுமுறை சுழன்று உயிர் கொடுக்கும் விதையாக மாறவும் அந்த விதைக்கு தேவையான வித்தாகவும்
சூழலுக்கேற்ப வளைந்து நெளிந்து வளரவே என்
கண்ணுக்கு தெரியா
வித்தகனை, விந்தையாளனை
வேண்டி வணங்குகிறேன்