Veena Shankar:
இசைக்கும் கருவியை பொறுத்து
அதன் இசை அமையலாம், அதை இசைக்க தெரிந்தால் மட்டுமே
இசை ரம்மியமாகும்
Veena Shankar:
மீட்டும் விரல்களிலும்
ஈர்ப்பு உள்ள மனதினாலும்
அமைதியான சூழலிலும்
மட்டுமே ரசிக்க இயலும்
இசையை
Veena Shankar:
தனிமை வெறுமையாகி விடாமல்
இருக்க கையில் இசைக்கருவி
நிழலிலும் இசைக்கும் ஜாலம்
கைவிரல்களின் நடனம் எளிமையாய்
இருளும் தகர்ந்தது இசையின் நளினத்தில்
எதுவும் குறையல்ல பெருமையே
Vidhya,
பதுமையின் கையில் வீணை
வீணாக போகதே ஒவ்வொரு
நொடியும், நாடியும் உன் விரல்
அசைவில் அசைய காத்திருக்கு
அகிலமும் , இந்த காற்றின்
திசையை மாற்றி நிற்க சொல்
இடையூறு செய்யாமல் ..
பாவை பாடும் பாடல் கேட்க
காத்திருக்கும் பாவலன் எங்கே!

No comments:
Post a Comment