Friday, January 17, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya


 

Veena Shankar: 

வெயில் தகிக்கும் வேளையில்

மயில் மேல் மையல்

கயல் விழியாள் யாரேன

 கொண்ட ஆராய்ச்சியால்

மயிலின் விழி நோக்க விழைய , மயில் மறுக்க,

மைவிழியாள் என்னை அழைத்தாள் என 

 நினைத்து பக்கம் செல்ல 

விழிகள் பரிமாறும் முன் 

மயிலும் அச்சம் கொண்டு 

இடறி விழ 

வீழ்ந்தவளை காளையும் கலையோடு கரங்களால் லாவகமாய் பற்றிக் கொள்ள

வெயிலும் நிலவென குளிர்ந்தது அங்கே!

மயிலும் வெயிலும் சேர்கையில் வெல்பவனும் எவனோ! 

அவனே வீரன்,  

காதல் ஆனதால் மௌனம் பேசியது கயல் விழியாலே மட்டும் 

கையில் ஏந்திய அழகுக் கலவையை வலையில் அவன் சிக்கவும் வைத்தானோ?

எவரும் சளைத்தவரல்ல

 கலாபக் கலையில்

அகன்ற மனதில் 

சுழன்றது காதல்

 உழன்றது இதயமும்

முன் பயின்ற யாவும் வீணே!

வீழ்ச்சியில் இல்லை வெற்றி 

என்று யார் உரைத்தது உலகில். 

வீழ வீழவே பெறுகிறோம் எதையும்.

வீழ்ந்து பார் !

வாழ்ந்து பார்க்க தூண்டும் 

வெற்றி மட்டுமே கொடி அடையாது

தோல்வியும் மனத்திரையில் 

வீழ்ந்து நிலைக்கும் காதலில் மட்டுமே!


 Veena Shankar: அம்பு எடுத்த வேளையில் ஓர்

அம்பிகை எதிரே வந்தாள் 

ஐம்புலன்களை அடக்க வைத்தே என்னை அதிர வைத்தாள் 

ஐம்பொன் சிலை போலே

 காட்சிக் கொடுத்தவளை கண்டு 

அம்பலத்தில் ஆடும் நாதனும் நாணினான்

அம்பலவாணனின் ரகசியமும் வெளிப்பட்டது

அம்பாள் இதை அறிய அவனும் விலகியே அந்த

அம்புலிப் பெண்ணை

எனக்களித்தான் 

அம்புலி தேய

அம்பலமானது எங்கள் காதல் முடிவுக்கு வந்தது யானை மேல்

அம்பாரியில் திருமண கோலத்தில்


Vidhya ,


ஓவியங்கள் மட்டுமே

 கற்பனைக்கு உயிர் கொடுக்க

 முடியும். 

பார்த்த உடனே அதில் நம்மை

 லயிக்க வைக்க முடியும்.

வளைந்த உடலா? இல்லை

 வில்லா?

காதலில் மறக்கும் அகிலமும்!

 நான்கு கண்களின் சந்திப்பில்

மறக்கும் தன்னிலை ,அதுவும்

 அரிதே !

மனத்தில் வடித்த உருவிற்கு

 உயிர்க்கொடுக்கும் பிரம்மன்

கலைஞன்!

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...