Sunday, January 5, 2025

ஸ்மைல் பிளீஸ் by Veena Shankar

 


'ஸ்மைல் பிளீஸ்", கொஞ்சம் சிரிங்க


"என்னங்க! கொஞ்சம் வாய மூடுங்க" என்று பாந்தமாக சொன்னாள் மனைவி. 

ஆனால் கணவன் தன் வாயை மூடின பாடில்லை. மீண்டும் மீண்டும் மனைவி சொல்ல கணவன் கேட்காததால் இம்முறை கொஞ்சம் ஆக்ரோஷமாக மனைவி கத்த, அக்கம் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் கணவன் மனைவியின் சண்டையை வேடிக்கை பார்க்க வேண்டி வாசலில் ஒருமித்து நின்றனர். 

" ஏங்க ! இதுக்கு மேல என்னால கத்த முடியலங்க. கொஞ்சம் வாயை அஷ்டகோணலா வைச்சிக்காம உதட்டை அழகா விரித்து சிரிச்சா மாதிரி வாயை வைங்க. அப்போதானே ஸ்டுடியோவில் எடுக்குற மாதிரி ஃபோட்டோ அழகா வரும்" என்று மனைவி சொல்ல ,

"சரி ! சரி! நான் சரியா உட்காறேன். நீ கோவிச்சிக்காம படம் எடு. " என்றான் கணவன் . 

மனைவியும் " ஸ்மைல் பிளீஸ்" என்று சொல்லி கேமராவை கிளிக் செய்தாள். 

"ச்சே! என்னமோ ஏதோ ன்னு நினைச்சிட்டு வந்தா

  ஃபோட்டோ எடுக்கவா இந்த அலப்பறி" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டே வீடு திரும்பினர் அக்கம்பக்கத்தினர்.

" வெரி குட்! சூப்பரா ஃபோட்டோ வந்திருக்கு பாருங்க!" என்று தன் கணவனிடம் காண்பித்தாள் மனைவி. தங்கள் திருமண நாளுக்கு கணவன் புதுசா வாங்கிக் கொடுத்த அலைபேசியில் ஃபோட்டோ எப்படி வருது என்று டெஸ்ட் செய்ய நினைத்த மனைவி. 

" ஓகே! இதையே ஸ்டுடியோவில கொடுத்து டெவலப் பண்ணி பாஸ்போர்ட் அப்ளிக்கேஷன் ல ஒட்டிடறேன். கொண்டா பார்ப்போம்" என்றவன் "ஃபோட்டோ எடுத்திருக்கிறா பாரு ஃபோட்டோ ? என்னை வச்சு படம் எடுக்க சொன்னா பின்னாடி இருக்கிற தோட்டத்தை எடுத்திருக்கிற " என்று கடிந்து கொண்டான் கணவன். 

"ஐயையோ! நான் உங்களை படம் எடுக்கலைங்க, அந்த மரத்தில இருக்கிற பறவையத்தான் எடுத்தேன் " என்று நக்கலாக திருப்பி பதிலடி கொடுத்தாள் மனைவியானவள். 

"பின்ன எதுக்கடி வாயை அப்படி வைங்க, இப்படி வைங்கன்னு சொன்ன, " என்று தலைக்கேறிய கோபத்தில் கேட்க, " உங்களை படம் எடுக்க நினைச்சு தான் சொன்னேன். ஆனால் உங்களை விட அந்த பறவை அழகா போஸ் கொடுத்தது. அதான் அதையே எடுத்திட்டேன் " என்று அவள் சொல்ல, மீண்டும் சண்டை புது கதையுடன் ஆரம்பமானது அதுவும் அதிக சத்தத்துடன்.


இம்முறை யார் வருவார் வேடிக்கை பார்க்க?

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...