Veena Shankar:
விடியும் இனிய காலைக்காக
இரவின் மடியில் ஓர் காளை
நிலவும் வர மறுத்த வேளையில்
மறைந்து போன விளக்கும் உயிர் பெற்றது
காகையின் இரைத் தேடலுக்கு முன்னே
விழித்திடு
வெளிச்சத்தின் போது இருள்
மறைந்தே உள்ளதே
அன்றி
இருள் அச்சம் கொள்ள அல்ல என்றென்றும்
Veena Shankar:
அறிவியலின் கண்டுபிடிப்பில் ஆச்சரியம்!!
இருளை போக்கிய விளக்கில் மட்டுமல்ல
அவன் காகையோடு
மரத்தின் நிழலில்
அமர்ந்து ரசிப்பது எதை?
எங்கிருந்து?
வேற்று கிரகவாசியின் சிந்தனையும் மலர்ந்தது பூமியின் வளமை கண்டு
அறிய முற்பட்டான்
காதலும் உண்டோ அங்கே என்று
Vidhya,
ஏய் நண்பா,
உனக்கும் பசி எனக்கும் பசி
விடியலுக்கு ஏங்கும் ஈர் உயிர்
நானோ லாந்தர் ஒளியில்,கற்பனையில் மரத்தை வளைத்து, கனவை பிடிக்க பறக்க நினைக்கிறேன்..
நீயோ,நிலவொளியில் நிஜத்தை பிடிக்க ,பறக்க மறுத்து, என் கனவில் நுழைகிறாய்..
பசி வேறு,உடல் வேறு ஆனால் மனதால் இணைகிறோம்.

No comments:
Post a Comment