வாசலில் ஓர் கோலம்
என்றும் சொல்லும்
வாசலின் கட்டளை
கற்பனையின் கலவை
பொறுமையின் வெளிப்பாடு
விரல்களின் நளினம்
வரைந்ததில் பெருமை
அமைதியின் நேரம்
இயற்கையின் வருடல்
ஜீவன்களின் உணவு
காண்பவருக்கு மருந்து
ரசிப்பில் ஆனந்தம்
வேளைகள் மாறி
மீண்டும் மீண்டும் களைத்து போடும் போது
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சிந்தனை
காலம் சொல்லும் சிறப்பு
தியானம் சொல்லும் பயிற்சி
காலையில் மலர்ந்து
மாலையில் தொடர்வது இதுவே
- Veena
அற்புதம் , என்ன கற்பனை!
உள்ளங்கையில் அடக்கிய
சிந்தனை ,வண்ணத்தில் ஒரு
கோலத்தில் அடக்கிய அழகு,
எண்ணற்ற வளமைக்கொண்ட
அழகை இவள் கோலத்தில்
அடக்கினாளே !
ஒன்று ஒன்றை போட்டியிட
குன்றாத வளத்தை தரும்
சூரியனை வணங்கி நிற்கும்
பேரினம்!
- Vidhya

No comments:
Post a Comment