Tuesday, January 21, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


வாசலில் ஓர் கோலம்

என்றும் சொல்லும் 


வாசலின் கட்டளை

கற்பனையின் கலவை

பொறுமையின் வெளிப்பாடு

விரல்களின் நளினம்

வரைந்ததில் பெருமை

அமைதியின் நேரம்

இயற்கையின் வருடல்

ஜீவன்களின் உணவு

காண்பவருக்கு மருந்து

ரசிப்பில் ஆனந்தம்

வேளைகள் மாறி 

மீண்டும் மீண்டும் களைத்து போடும் போது 

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சிந்தனை

காலம் சொல்லும் சிறப்பு

தியானம் சொல்லும் பயிற்சி

காலையில் மலர்ந்து

மாலையில் தொடர்வது இதுவே

- Veena 

அற்புதம் , என்ன கற்பனை!

 உள்ளங்கையில் அடக்கிய

 சிந்தனை ,வண்ணத்தில் ஒரு

 கோலத்தில் அடக்கிய அழகு,

எண்ணற்ற வளமைக்கொண்ட

 அழகை இவள் கோலத்தில்

 அடக்கினாளே !

ஒன்று ஒன்றை போட்டியிட 

குன்றாத வளத்தை தரும்

 சூரியனை வணங்கி நிற்கும்

 பேரினம்!

- Vidhya 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...