Sunday, January 26, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar: மதில் பிளவுகள் போலே சரிபாதி இங்கே

மனப் பிளவு கொண்டு நிற்கிறது

 Veena Shankar: ஒரே திசையில் வாழ்வை கடக்க எண்ணி

கூடிய கழுத்துப் பூண் 

இங்கே பிளவு கொண்டது

திசையையும் மாற்றிக் கொண்டது 

திசைகள் கூட ஓர் முனையில்

கூடுவது போல

வரும் நாட்களில் இவர்களும் 

இணைவார்கள் என்ற

நம்பிக்கையில்

எதிர் கொண்ட பயணம்

 Veena Shankar: இருவர் மட்டுமே ஆரம்பித்த வாழ்க்கை பயணத்தில்

பிள்ளைகள் சேர்ந்தவுடன் பெருகி

மீண்டும் சுருங்கியது

கடமைகள் முடிந்ததும்

இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் 

என்று விரும்பிய நாட்கள் போக

இப்போது இருவர் மட்டுமே 

தனிப் பயணம் எங்கும்

உலகில் நான் ஜனிக்க இருவர்

கொண்ட பயணத்தால் நானும் 

இன்று அவ்வழியே

 Veena Shankar: எதிரெதிர் திசை நோக்கி நின்றாலும்

ஈர்க்கும் காந்தம் போல் 

பற்றிக் கொள்ள துடிக்கும் மனமும் 

அவரவர் வழியில் சரி என்று எண்ணி தொடர்ந்தாலும்

வெற்றியும் கொள்ள முடியும் ஆங்கே

வெற்றிக்கு தேவை திறமை மட்டுமல்ல 

எதிர்பாரா நேரத்தில் வரும் திருப்பங்கள் கூட 

ஆதலின் துணை நிற்போம் துணையின் வெற்றிக்கு என்றும்

Vidhya, 

மனம் போட்ட பொய் பூசல் என்று அறியா மூளை..

கோபத்தில் எல்லா வார்த்தையை அள்ளி வீசி என்ன பயன்..

நெடுந்தூரம் செல்ல வேண்டி இருக்கு!

பாசத்தில் வேசத்தில்,பழையன புதியன உமிழ்ந்து என்ன பயன்..

விடிந்தால் வடியும் மழைநீர் போல் கோபம் இதில் பொய் பூசல் வேண்டாமே!

இருவர் தூக்கம் தொலைக்க ஒருவர் விட்டுக்கொடுத்தால் என்ன?

மழலை இல்லாத போது மழலையாக நின்ற இருவர்!

வறண்ட பூமியில் பூக்கும் கள்ளிப்பூவும் அழகே!



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...