கதிரவனையும் கரங்களில் ஏந்தும்
துணிச்சல் யார் தந்தது?
கதிரவனும் குளிர்ந்தானோ
ஏந்தியவர் யாரோ?
அவன் காதலியோ?
கடலன்னை தன் குழந்தையின் பிம்பத்தை நிழலாய்
தாங்கியதும் ஏனோ?
எவர் மறுத்தாலும் மறைத்தாலும்
தாயின் அன்பு என்றும்
கிடைக்குமே
எல்லா பிள்ளைகளுக்கும் சரிசமமாய்
இயற்கையும் விதி விலக்கோ இங்கே?
Vidhya:
ஒவ்வொரு முறை பார்த்தாலும் புதியவனே..
செக்கசிவந்த உன் முகத்தை பார்த்தவுடன் அந்த வான் மட்டுமில்லை நானும் உன் அடிமை..
நீரில் படரும் உன் அழகில் என் மனமும் படருதே..
தினமும் உன்னை அதிகாலையில் காதலிக்க நேரமில்லை கிடைக்கும் வாய்ப்பில் மனதார பார்த்து ரசிக்கிறேன்,பைத்தியம் ஆகிறேன்...
நீ வந்தாலும் தொல்லை,வராவிட்டாலும் தொல்லை..
என் உருவை நிழலாக தந்த தோழனே உன் வருகை என்றும் வசந்தமே!

No comments:
Post a Comment