மானின் விழியும்
மான் விழியாலும்
எதிரெதிரே நோக்கினால்
வானத்து நிலவும் கூட
தண்ணீரில் மிதக்குமோ?
மிதந்த பந்தை கைப்பற்றுவதில்
போட்டியும் உண்டோ?
யார் அழைத்து இந்த
பிரவேசம் இங்கே!
நதி நீரும் பூத்ததோ?
அவள் வெண்பற்களுக்கு நாணி
நிலவும் நீரில் வெண்மை இழந்ததோ?
அழையாது செல்லும் விருந்து
கூட மரியாதை இழக்குமே?
பெண் ஒருத்தியைக் காண
இந்த செயலும் தேவையோ?
காதில் போட்டுக் கொள்ளாத வெண்ணிலா, வானத்தில்
நகராது காத்திருக்கிறது, பெண்ணே!
நீயும் விடை கொடு அதற்கு
நீ இவ்விடத்து விலகி
நீ விலக மானும்
துள்ளி ஓடிடுமே!
அவரவர் வேலையை
சிரத்தையுடன் காக்க,
நீயும் அகலுவாய்
உன் அழகில் மயங்க ஓர் காதலன் உள்ள போது இவை யாவையையும்
அதனிடத்தே விடுப்பாய்
Vidhya,
நிலவே கண்ணாடியாக எதை நோக்கி நின்றாளோ!
எனது கண்ணாடி தண்ணீர் என்றது நிலவு!
உன்னுடைய புறஅக அழகை காட்டும் கண்ணாடி எங்கே?
அதை எதிர் நோக்கியே என்னுடைய உடல் காற்றில் மிதக்க,
காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ரணமாக கனக்கிறது.
கணநேரம் கூட பொறுக்கா இதயம் படபடக்க, மானின் அழகில் மையல் கொண்ட கண்கள் ஏங்க..
மதிமயக்கும் நீயும் ,மாலை பொழுதும் என்னை கட்டிப்போட சிலையாக , அனைத்தும் மறந்து ,லயிக்க வைக்க தனிமையின் துணையே நிறைவு!
அதற்கு ஈடாக வேண்டுவன என்ன?

No comments:
Post a Comment