Thursday, January 9, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


கடந்த காலம் வரை தேடியது கிட்டியது

இப்போது கையருகில்

தேடிய உடலையும் பறிகொடுத்த நிலையிலே


 பற்றுதல் உள்ள வாழ்க்கையை பற்ற முதலில் அவன் மேல் பற்றுதல் வேண்டும்,. அவன் மேல் நம்பிக்கையை பற்றிய உடன் பணம் என்பவனை பற்றிக் கொள்ள வேண்டும். 

இவனையும் பற்றிய பின் மற்றவரை விலக்கி வைக்க வேண்டும். 

ஏனெனில் தான் பற்று கொண்டு பற்றிய எதையும் அடுத்தவர் கைப்பற்றாமல் இருக்க


 விரல்கள் எழுந்து பார்த்தன, பஞ்சத்தில் இருந்தவனிடம் தான் பெற்ற லஞ்சப் பணத்தின் ஊடே ,

தன் மறுகை மூழ்கியது தெரியாமல்

தன்னைத் தானே தொலைத்ததையும் அறியாமல் தேடினான் காலம் சென்ற பின்னே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...