Thursday, January 23, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 Veena Shankar: மயிலும் தோகை விரிக்க அழகு

இந்த பெண் சிகை விரிக்காமலே அழகு

Veena Shankar: காட்சிகள் விரிய விரிய 

சிந்தனைகள் விரியும்

சிந்தனைகள் விரிய விரிய 

கற்பனைகள் விரியும்

கற்பனைகள் விரிய விரிய

படைப்புகள் பெருகும்

படைப்புகள் பெருக பெருக 

மகிழ்ச்சி பிறக்கும்

மகிழ்ச்சி பிறக்க பிறக்க

அமைதி பிறக்கும்

அமைதி பிறக்க பிறக்க

எண்ணங்கள் விரியும்

எண்ணங்கள் விரிய விரிய

காட்சிகள் ரம்மியமாகும்

 Veena Shankar: புது உறவு தேடி தனிமையா?

உறவுகளில் கொண்ட ஏமாற்றமா?

காதலில் வெறுத்த மனமா?

அது தந்த மௌனமா?

இயற்கையோடு வாழ விருப்பமா?

அதன் சீரழிவை எண்ணி கலக்கமா?

தன்னிலை மறந்து சுணக்கமா?

பின்னழகில் அடுத்தவர் மயங்க காட்சியா?

சேலை உடுத்தியதால் வந்த வெட்கமா?

கேசத்தை அள்ளி முடித்து மலைக்கு சவாலா?

வெண்மதி காண வருகையா?

இது ஏதும் இல்லையாம்

பெண்ணிடம் நான் விசாரிக்கையில் அவள் சொன்னாள்

என்னை தூரத்தில் படம் பிடிக்கிறார்கள்

படக் குழுவினர்

பக்கத்தில் என் தலைவனின் துணையோடு

என்றாள் நாடக நடிகை

Vidhya:

சாலையில் போகும் போது சேலை உடையே ஒரு கம்பீரத்தை தரும் மனதில் ..

அதுவும் சோலையில் சேலை கட்டி மயில் தோகை போல் ஆட பாட்டும் சேர்ந்து வரும் காற்றோடு..

குயில் கூவும் சோலையில், மாலையில் ஜில்லென்ற காற்றில்,தனிமையில் அலை அலையாக ஆடும் மனம் ,கட்டுக்கடங்காத கடல் அலையாக மோத தோற்றுப் போகும் எதிரில் வரும் கண்கள்..

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...