Veena Shankar: போதையில் பாதை மாறிய இவர்கள்
பாதையிலும் பகையாயினர்
பகை என்றே அறியாத ஓர் நெஞ்சம்
நகையாடுதே!
நகைத்தும் விருந்தாகுதே!
விருந்தும் மருந்தாகாதே!
மருந்தும் மூன்று வேளையே !
வேளை பல கடந்தும் நம்பியவன் கைவிடுவான் நட்பு என்னும் போர்வையாலே !
இங்கே நட்பு என்பதும். வீண் வார்த்தைதானே !
வார்த்தையுள் வஞ்சம் இருந்தால் நட்பும் தானே மறையுமே!
மறையும் யாவும் மாயையே!
மாயையின் பின்னால் செல்வதும் போகம் தானே!
போகத்தில் வீழ்ந்தவர் ஏழார் என்றும்
போதை மாற்றிய பாதையால்
Veena Shankar: தொலைந்த வாழ்வு பெற்றது சுகம்
போதை தரும் பொருளால்
மீட்டெடுக்க தெரியாமல் அவனும் அதிலே தானும் கரைந்தான்
போதை தந்த மோகப் பொருளால் மதி மயங்கியே நின்றான்
மதி உறக்கம் கொண்ட வேளையில்
அவன் மதி இறக்க வேண்டும்
எடுத்தான் கத்தியை மதி மழுங்கிய வேறொருவன்
காரணம் தெரியாமல் உயிர் துறக்க
காரணமானான் அவனுமே
உயிர் போவதும் உறுதியே
கத்தியில் குத்துப்படுவதால் பெருகியது குருதி
வீழ்ந்தது உயிர்
பகையேன் என அறியாமல்
Vidhya,
வேறென்ன சொல்ல
தீதும் நன்றும் பிறர் தர வாரா?
எதை தொட்டாயோ அதுவே கொல்லும்!
இதில் பலருக்கும் நட்பு ஒரு எளிய வழி!

No comments:
Post a Comment