பூவென்று நினைத்தே
பக்கம் வந்தது
வண்ணத்துப் பூச்சியும்
வண்ண கனவுகளை தரும் காதலனும்
அவளின் நறுமணம்
நுகர்ந்து
காதல்
எட்டி இருககும் மனங்களை பக்கம் சேர்க்கும்
பக்கம் இருந்த உறவுகளை எட்டி நிற்க வைக்கும்
எதிரும் புதிரும் அல்ல காதல்
வினாவும் வீணும் அல்ல காதல்
தலைப்பும் முடிவும் அல்ல காதல்
கடனும் கருவியும் அல்ல காதல்
தொடுவதும் உரசுவதும் அல்ல காதல்
உரிமையும் பிரிவும் அல்ல காதல்
ஆதியும் அவதியும் காதல்
ஊடலும் கூடலும் காதல்
ரசிப்பும் ஆறுதலும் காதல்
பகிர்வதும் பாராட்டுவதும் காதல்
தெளிவும் துணையும் காதல்
வசந்தமும் வாழ்வுமே காதல்
தோட்டத்து பூக்கள் எத்தனை இருந்தாலும்
பூவை சூடிய பாவையே
அழகு இங்கே
காதலன் மதி
மயங்கி நிற்பதால்
வண்ணம் ஏந்திய பூச்சியும் தன்னிலை
வெட்கி எட்டி நின்றதோ?
யார் அறிவார்?
ஒருவர் மனதை மற்றொருவர் பிழையில்லாமல் இங்கே

No comments:
Post a Comment