Monday, January 6, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


 பூவென்று நினைத்தே

பக்கம் வந்தது

 வண்ணத்துப் பூச்சியும்  

வண்ண கனவுகளை தரும் காதலனும்

அவளின் நறுமணம்

நுகர்ந்து


 காதல்


எட்டி இருககும் மனங்களை பக்கம் சேர்க்கும்

பக்கம் இருந்த உறவுகளை எட்டி நிற்க வைக்கும்


எதிரும் புதிரும் அல்ல காதல் 

வினாவும் வீணும் அல்ல காதல்

தலைப்பும் முடிவும் அல்ல காதல்

கடனும் கருவியும் அல்ல காதல்

தொடுவதும் உரசுவதும் அல்ல காதல்

உரிமையும் பிரிவும் அல்ல காதல்


ஆதியும் அவதியும் காதல்

ஊடலும் கூடலும் காதல்

ரசிப்பும் ஆறுதலும் காதல்

பகிர்வதும் பாராட்டுவதும் காதல்

தெளிவும் துணையும் காதல்

வசந்தமும் வாழ்வுமே காதல்


 தோட்டத்து பூக்கள் எத்தனை இருந்தாலும்

பூவை சூடிய பாவையே 

அழகு இங்கே 

காதலன் மதி

மயங்கி நிற்பதால்

வண்ணம் ஏந்திய பூச்சியும் தன்னிலை

வெட்கி எட்டி நின்றதோ?

யார் அறிவார்?

ஒருவர் மனதை மற்றொருவர் பிழையில்லாமல் இங்கே

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...