Veena Shankar:
கரையும் காகத்திற்கு
இசைக்கும் மனிதனுக்கும்
ஒரே ராகம்
குடும்பம் தொலைந்த தனிமையில்
சோகம் எனும் போர்வையில்
சொர்க்கமும் பக்கமே
மன்னிப்பு எனும் குரலிலே
Veena Shankar:
கரைந்த இடத்தில் கரைந்த மனது
ஒரு வாய் சோறுக்காக
கறை படியா மனிதர்
உள்ளவரை
கரையும் நீளுமே
Vidhya:
காலையிலிருந்து பாடுகிறேன்
தம்பி அந்த ஜன்னல் கதவு
திறக்க மாட்டிங்குது ..
நானும் தான் அண்ணன்
காலையிலிருந்து வாசிக்கிறேன்
அந்த ஜன்னல் கதவு
திறக்கவில்லை..
அவங்க எதுவும்
ஊருக்கு போயிட்டாங்களோ!
நான் ஒன்னும் படத்துல பாட
வாய்ப்பு கேட்கல சோறு தானே
கேட்டேன்..
நானும் தான் வாசிக்கிறத கேட்க
சொன்னேன்.அன்றைக்கு மூடிய
கதவு திறக்கவே இல்லை.
நாம வேணும்னா வீட்டுக்கு
முன்னாடி போவோமா!
அடேய் போன வாரம் வாங்கினது
பத்தல..ஆள விடுடா சாமி.
அடுத்த தெரு பார்க்கிறேன்.
- வித்யா
நட்புக்கு எல்லையில்லை
இசைக்கு மயங்காத ஆளில்லை
நீ பாட நான் வசிக்க வந்தது
தென்றல் காத்து.
இசையில் பசியும் மறக்கும்

No comments:
Post a Comment