Wednesday, January 8, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 



மழையோ வெயிலோ 

ஏதும் உன்னை அண்டாமல் இருக்க

குடை பிடிப்பேன்

உன் நினைவு என்னிடம் இருக்கும் வரை

என் ஆவி உள்ள வரை


குடை என்பதை தாங்கி பிடிக்க வேண்டுமென்றாலும்

தாங்கி நிற்பது எளிதே

நம் அன்பின் வழியில்


ஈரம் கொண்ட நெஞ்சினால்

ஏந்திய குடை

மழையின் ஈரத்தை

துடைக்கும் வண்ணம்


 ஊடலால் கண்கள் வேர்க்கையில் காதலால் ஓர் செயல்

 வானத்தின் கண்ணீர் தன் காதலி மேல் வீழாமலிருக்க குடை ஏந்தும் கரம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...