மழையோ வெயிலோ
ஏதும் உன்னை அண்டாமல் இருக்க
குடை பிடிப்பேன்
உன் நினைவு என்னிடம் இருக்கும் வரை
என் ஆவி உள்ள வரை
குடை என்பதை தாங்கி பிடிக்க வேண்டுமென்றாலும்
தாங்கி நிற்பது எளிதே
நம் அன்பின் வழியில்
ஈரம் கொண்ட நெஞ்சினால்
ஏந்திய குடை
மழையின் ஈரத்தை
துடைக்கும் வண்ணம்
ஊடலால் கண்கள் வேர்க்கையில் காதலால் ஓர் செயல்
வானத்தின் கண்ணீர் தன் காதலி மேல் வீழாமலிருக்க குடை ஏந்தும் கரம்

No comments:
Post a Comment