தேநீர் சூடாக குடித்து
உதட்டை சுட்டுக் கொண்டதால் நடந்த முத்த பரிமாற்றம் இங்கே வெகு சூடாக
எவரோ தயாரித்த தேநீரில் இரு மனங்கள் சங்கமம்,
சங்கமித்ததால் பிறந்த மௌனம்
மௌனத்தின் வெளிப்பாடே
சத்தமில்லா முத்தம்
பரிமாறப்பட்ட வேளையில் இரண்டிலும் மனம்
கொண்டதும் திருப்தியே
பேச்சு தொடங்குவதும் இங்கே
தொடர்வதும் இங்கே
முடிவதும் இங்கே
அதனுள்
எத்தனை துக்கங்கள்
எத்தனை இன்பங்கள்
எத்தனை நினைவுகள்
எத்தனை நெருடல்கள்
எத்தனை பரிமாற்றங்கள்
எத்தனை விவாதங்கள்
எத்தனை வினாக்கள்
எத்தனை சமாதனங்கள்
எத்தனை குறைகள்
எத்தனை வரைமுறைகள்
இப்படி பல இருந்தாலும்
மௌனத்தை விரித்தால் முத்தத்தை கொள்ளலாம் எதையும் வெல்லலாம்

No comments:
Post a Comment