Saturday, December 31, 2022

யார் அந்த அவை by Vidhya

 


யார் அந்த அவை ?

வானம் வசப்படும்...செக்கச்சிவந்த சூரியனின் ஒளிக்கதிர்களால் வானம் மட்டும் வசப்படவில்லை ...

கடலும் வானமும் சங்கமிக்கும் அழகைக் கண்ட நாம் சிவந்த கீழ்வானும் மனிதனின் கைவண்ணத்தால் மெருகேறிய சாலையும் வானமும் சங்கமிப்பது வானத்தோடு நம்மையும் வசப்பட செய்கிறது..

நீண்டு செல்லும் சாலையின் இருப்புறமும் பாலைமண் சூழ கண் எட்டிய தூரம் வரை மண்மட்டுமே ...

காற்றில் பறக்கும் பாலைமண்ணை பார்க்க மனம் பறக்கும் புது அனுபவம்..

பாலையில்க்கூட செழித்திற்கும் புதரைப்பார்க்கும் போது தினமும் வந்து வந்து காத்திருக்கும் உங்களின் ஞாபகம் வந்தது...

முதலும்,முடிவும் இல்லா சாலையும் , வானமும் 

வளைவுகள் போன்றவை வந்தாலும் ,மாயத்திரையை விலக்க..

ஏதுமற்ற நிலையில்...அவைகளை களைந்திட வானம் வசப்படுத்தியது...

காலமும் மனமும் வசப்பட்டால் பாலைக்கூட சொர்க்கமாகும்...

யார் இந்த அவைகள்..

தொடரும்...




தோன்றும் வினாக்கள் by Veena Shankar

 


தோன்றும் வினாக்கள்


உழைப்பிற்கேற்ற கூலி செல்வமா? நிம்மதியா? - அது எது என்று எண்ண தோன்றுகிறது



எங்கோ இருப்பவனுக்கு எங்கிருந்தோ கிடைக்கும் உணவுக்கும்

உடைக்கும் மூலதனம் - அது யார் என்று எண்ணத் தோன்றுகிறது



கண்டுபிடிப்புகள் எங்கோ அரங்கேற அவை உலகமயமாதலும் - அது எதனால் என்று எண்ண தோன்றுகிறது



பாச வலையில் சிக்கி தவிக்கும் உறவுகளுக்கு வரும் மனஸ்தாபங்கள் - அது ஏன் என்று எண்ண தோன்றுகிறது



ஆறறிவு படைத்த அனைவரும் சமம் என்று சொன்னாலும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை வருவது - அது எதற்கு என்று தோன்றுகிறது



பருவம் பல கடந்து வந்தாலும் பெண்ணின் உடலில் தோன்றும் வெட்கம் - அது எப்படி என்று எண்ண தோன்றுகிறது



கருவறையில் ஜெனிக்கும் உயிரும் அது வரும் பாதையும் - அது எவ்வாறு என்று எண்ண தோன்றுகிறது 



ஆண் - பெண் பார்வையில் ஆரம்பித்து உடலில் முடிவடையும் அந்த பந்தம் - அது என்ன என்று எண்ண தோன்றுகிறது



கோடி வருடங்கள் ஆனாலும் பூமியில் கொட்டி கிடக்கும் செல்வங்கள் - அது எவ்வளவு என்று எண்ண தோன்றுகிறது



நம்மை மீறிய சக்தி உண்டு என்று நம்பினாலும் - அது எந்த வடிவம் என்று எண்ண தோன்றுகிறது

Friday, December 30, 2022

யார் அந்த 'அது' by Vidhya Nivash

 


யார் அந்த அது?

ஒருமையா? பன்மையா?

நேற்றைய படத்தில் நெடுந்தூர சாலையின் இருமருங்கிலும் படர்ந்து செல்லும் செடிகள்...கண்ணை பறிக்கும் அழகு சில நொடிகளில் வளைவு .அந்த பாதை தொடருமா? அல்லது எங்கே போய் முடியும் என்ற கேள்வி?

அழகான சாலையில் படர்ந்திருக்கும் செடியின் நிழல் சாலைக்கு குடைப்பிடிக்க....பயணத்தை ரசித்த மனம்... தொடக்கத்தை தேடா மனம் முடிவை தேட அலைபாய்க்கிறது..

இடையில் பயணத்தை ரசித்த மனம் எங்கே?



தினமும் நாங்கள் வந்து வந்து மோதி போகிறோம்...

வருந்துவதற்கு காரணம் தேடுவதில்லை.. நினைத்தவுடனே எங்கிருந்து தான் வருமோ தெரியவில்லை.  மனக்குப்பையின் அடி ஆழத்திலிருந்து கிளறி வந்து வந்து போகும் நொடி பொழுதே எண்ணங்கள் பல..

சிரிப்பதற்கும், பாராட்டுவதற்கும்,ரசிப்பதற்கும் மனம் உடனடியாக ஏற்றுக்கொள்கிறதா??அதற்கு நாள்,நேரம் தேடும்..

அந்த அவை(கள்) வேரூன்றி வளர்க்கிறது...களையை அறுக்காமல் விட்டால் எளிதில் பெருகி முட்கள் போல் குத்தும்..

களைக்கொல்லியாக நாங்களும் தினமும் வந்து வந்து போகிறோம் ...

அவைகளின் நடுவே எங்களையும் கவனிப்பாய் என்று காத்திருக்கிறோம்...

யார் அந்த 'அவை(கள்)'?

தொடரும்..


Thursday, December 29, 2022

யார் அந்த "அது" by Vidhya Nivash

 


தினமும் சூரியனும், சந்திரனும் வந்து வந்து  போகிறார்கள்...

வெயிலும், மழையும் ,பனியும் ,பசியும் வந்து வந்து போகிறது...

ஆசையும், பாசமும் ,கோபமும் வந்து வந்து போகிறது...

தினமும் நேரமும்,வாய்ப்பும் வந்து வந்து போகிறது...

மனதில் எண்ணிலடங்கா எண்ணங்கள் வந்து வந்து போகிறது..

மறந்து போன விடாமுயற்சியும் ,அடையாளமும் வந்து வந்து போகிறது...

என்று அது உன்னில், உன்னை அறியாமல் வேரூன்றி ஆழமாக போகிறது ...என்பதை அறிவாய் என வந்து வந்து போகிறோம்..

என்று அந்த மாயத் திரையை விலக்கி...

விழிப்பாய் என்று தினமும் வந்து வந்து காத்திருக்கிறோம்...

ஆனால் நீயோ பல காரணங்களால் எங்களை மறந்து பலவற்றில் மூழ்கி உன்னை மறந்துவிடுவாயோ என வருத்தம்..

யார் அந்த "அது"....

தொடரும்...

படத்திற்கு கவிதை "டோரா வின் சாயலில் ராதாவின் வேடம்" by Veena Shankar

 


டோரா வின் சாயலில் ராதாவின் வேடம்


அரண்மனையில் பூக்களை கண்டுள்ளேன் ஆனால் அரவாணியான பூக்களை கண்டிலேன்


மாறுவேட போட்டியில் வென்றது ஆணா? பெண்ணா?

கண்ணாடியில் தெரிவது நீயா? நானா?

வண்ணத்தில் சிறந்தது வெண்மையா? நீலமா?

அழகில் மயங்கியது கிருஷ்ணனா? ராதையா?

மலராக ரசிப்பது உன்னையா? என்னையா?


பெண்ணும் கடவுள் என்பதன் மறைமுகப் பார்வை


முகம் பார்க்கும் கண்ணாடியிலும் மதுசூதனனின் பிம்பம் தெரிய மதி மயங்கி நின்றாள் இந்த ராதை


காதலனே கணவனாகி விட்டால் கனவும் காத தூரம் செல்லும் கள்ளமில்லா காதலியின் காதலால்


கற்கண்டாய் இனிப்பேன் என்று சொல்லி கற்பூரமாய் மறைந்த காதலனை எண்ணியே உருமாறிய காதலியின் அர்த்த தோற்றத்திலும் நர்த்தனமாடுகிறது கண்கள்


இப்படி இருந்தால் ஆதார் அட்டை கிடைக்குமா? அரசுக்கே சவால்

Wednesday, December 28, 2022

பொங்கல் பரிசு by Veena Shankar

 


பொங்கல் பரிசு


                                           தனியார் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்து வரும் ரமா, அவளுக்கான கேபின் வந்து வெகுநேரமாகியும் அவள் இன்று கிளம்ப நேரமாகிவிட்டதால் தன் குழந்தையிடம் பிரியாவிடை கொடுத்து அவசர அவசரமாக கேபினை நோக்கி வந்தாள். கேபினை விட்டு இறங்கியதும் மின்னல் போல உள்ளே சென்றாள். இன்று வீட்டை விட்டு கிளம்பும் பொழுது நிறைய வேலை இருந்ததால், அதை முடித்து கிளம்புவதற்கு நேரம் ஆகிவிட்டது. இதுநாள் வரை கால தாமதமாக வந்தது கிடையாது என்பதால் அவளிடம் இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது.


                                         இன்றைய தினம் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி என்பதால் அரை மணி நேரத்திற்கு பதில் அவளுடைய நிகழ்ச்சியானது ஒரு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டது. இன்றைய நிகழ்ச்சி மிகவும் அவளுக்கு முக்கியமாகக் கருதப்பட்டது. ஏனெனில் இந்த பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிக்கு பல பேர் போட்டியிட்டாலும் கடைசியில் இவளுக்கே அதுவும் ஒதுக்கப்பட்டது. முற்றிலும் மழலை செல்வங்களுக்கான நிகழ்ச்சி என்பதால் நிதானமாகபேச வேண்டும் என்றும் நிபந்தனை போடப்பட்டிருந்தது. அவள் தன் கை கடிகாரத்தை திருப்பிப் பார்க்க நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் இருப்பதை உணர்ந்த ரமா, ஒரு வாய் தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். பின் அந்த நிகழ்ச்சியை ஆரம்பிக்க தயாரானாள்.   


                    ஒலி - ஒளிபரப்பு நிலையங்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தாலும் தங்கள் சுய துக்கங்களையும் மகிழ்ச்சியையும் மறந்து தான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பரபரப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய முதல் நேயரை சந்தித்தாள். அந்த சுட்டிக் குழந்தையிடம் பல கேள்விகளை கேட்டு, குழந்தைக்கு பிடித்த பாடலை ஒலிபரப்பு செய்வதாக கூறி இணைப்பைத் துண்டித்தாள். இப்படியே பல குழந்தைகளின் மழலை பேச்சை கேட்டு அவர்களுக்கு ஏற்ற படி தானும் மழலைச் சொல் பேசினாள் ரமா. 


                                      இப்படியாக பேச்சு நகர, அடுத்ததாக வந்த குழந்தை அவளை மிகவும் கவர்ந்தாள். அந்த குழந்தையிடம் பெயர், வயது மற்றும் பிற விவரங்களை கேட்டு குழந்தையின் விருப்பப் பாடலை ஒலிபரப்புவதாக சொன்னாள். அவள் இணைப்பை துண்டிப்பதற்கு முன் அந்தக் குழந்தை, மேலும் தனக்கு ஒரு விருப்பம் இருப்பதாக தெரிவிக்க, என்ன என்று விசாரித்தாள் ரமா. அதற்கு அந்த குழந்தை இந்த வருடமாவது பொங்கலன்று தன் அம்மாவும் அப்பாவும் ஒன்றாக இணைந்து தங்களது கிராமத்தில் உறவினர்களோடு பொங்கல் கொண்டாட விரும்புவதாக ஆணித்தரமாய் பேசியது. 

                                          அந்த குழந்தையின் பேச்சும் தன்னுடைய மகளின் பேச்சும் ஒன்றாக இருப்பதாக உணர்ந்த ரமா, தன் கண் ஓரத்தில் கண்ணீரை படர விட்டிருந்தாள். அதன் மழலை பேச்சில் மயங்கிய ரமா, குழந்தையின் பெற்றோர் என்ன செய்கிறார்கள் என்று கேட்க, குழந்தையும் தன் அப்பா கிராமத்தில் விவசாயம் பார்ப்பதாகவும் அம்மா ரேடியோ ஜாக்கியாக வேலை பார்ப்பதாகவும் அம்மா - மகள் இருவரும் நகரத்தில் தனியாக வசிப்பதாகவும் சொல்ல, அக்குழந்தை தன் மகள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள். இருந்தாலும் நிகழ்ச்சியின் மத்தியில் உறவுகள் வெளிப்பட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் ரமா. அந்த குழந்தையிடம் இந்த வருடம் கண்டிப்பாக ஆசை நிறைவேறும் என உறுதி சொன்னாள் ரேடியோ ஜாக்கியான ரமா. ஆனால் தன் அம்மா இப்படி சொல்வதை கேட்டவுடன் பாசத்தை மறைக்கத் தெரியாத அந்த குழந்தை “தேங்க்யூ அம்மா” என்று தன் மழலை சொல்லில் சொன்னது. இந்த வருடம் முதல் தன் குழந்தைக்கு இதுவே பொங்கல் பரிசாக அமைய வேண்டும் என தன் வேலையை அத்தினம் ஒதுக்கி வைக்க முடிவு செய்தாள் அம்மா ரமா. 


மழலையின் மனது பெற்ற தாய்க்கு புரியும். பாசத்திற்கு எல்லை இல்லை என்பது மழலைக்கும் தெரியும் போல.

Sunday, December 25, 2022

நன்கொடை by Veena Shankar

 


நன்கொடை


                                              கோயில் வாசல் முன் செருப்பு தைத்து கொடுக்கும் தொழில் செய்து வந்தான் முனியசாமி. முன்பு போல செருப்பு அறுந்து போன உடன் அந்த செருப்பையே தைத்து போடுபவர் இப்போது மிகச் சிலரே என்றாலும் முனியசாமிக்கு தெரிந்த ஒரே தொழில் என்பதால் அதை செய்து கொண்டிருந்தான். அது மட்டுமல்லாது கோயிலுக்கு வெளியே பக்தர்கள் விட்டுச் செல்லும் செருப்பையும் கொண்டு வந்து அதை நன்றாக சுத்தம் செய்து, தைத்து தன் கடை வாசல் முன் வைத்து விற்று வந்தான். சில தோல் பைகளையும் விற்பதற்காக தொங்கவிட்டு இருப்பான். விலை குறைவு என்பதால் அதையும் வாங்கிச் செல்லும் மக்களும் உண்டு. அதில் கிடைக்கும் வருமானம் முனியசாமிக்கு போதுமானதாக இருந்ததால் தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். கோயில் வாசலுக்கு முன்னே கடை வைத்திருப்பதால் அங்கே வருபவர்களுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருந்தான்.


                                                       பள்ளி விடுமுறை என்பதால் முனியசாமியின் மகன், தன் தந்தைக்கு உதவியாக செருப்பு கடைக்கு வந்திருந்தான். அன்று கோயில் வாசலில் நன்கொடை கொடுத்தவர்களுக்கு கோயிலில் நன்றி பாராட்டும் விழா ஒன்று நடைபெற இருப்பதாக பதாகையில் எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்த முனியசாமியின் மகன். 


                  அப்பா! இந்த பாராட்டு விழா எதற்கு நடக்கிறது?” என்று கேட்டான். அதற்கு முனியசாமி,


                “இந்த கோயிலில் தற்போது தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது உனக்கு தெரியும். அதற்காக நிறைய பொருளுதவியும் பண உதவியும் செய்தவர்களுக்கு அவர்களின் செயலை பாராட்டி ஒரு விழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. அந்த விழாவினை கோயில் கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.” என்று சொன்னதும்


                             “அப்பா! நீங்கள் இந்த கோயிலுக்கு நன்கொடை கொடுத்து இருக்கிறீர்களா?” என்று கேட்டான்.


                     “ஆமாம்பா! நான் இந்த கடையில கிடைக்கிற வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து வைத்து சுமார் ஐந்து ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறேன்.” என்று சொல்லவும்  


                                   “நீங்களும் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளப் போகிறீர்களா? அந்த கமிட்டியினர் உங்களை அழைத்து உள்ளார்களா?” என்று கேட்டான்


                               “அது எப்படிப்பா என்னை கூப்பிடுவார்கள்? நான் வெறும் ஐந்தாயிரம் தானே கொடுத்திருக்கிறேன். அவர்களெல்லாம் லட்சக்கணக்கில் கொடுத்து இருக்கிறார்கள்.” என்றான் முனியசாமி. 


                            “அப்படி என்றால் அவர்கள் எல்லாம் என்ன தொழில் செய்கிறார்கள் அப்பா?” என்று மறுபடியும் அவன் மகன் கேட்க, 


                              “அவர்கள் எல்லாம் தொழிலதிபர்கள். தொழிலதிபர்கள் என்றால் பெரிய அளவில் தொழில் செய்பவர்கள். நிறைய பேரிடம் பழக்க வழக்கம், பண பரிவர்த்தனை வைத்துக் கொள்பவர்கள்.” என்று மட்டும் பதில் சொன்னான் முனியசாமி.


                                      “அவ்வளவு பெரிய தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதும், இந்த சின்ன தொழில் செய்து கொண்டு நீங்கள் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்த செயலும் ஒன்றுதானே. அவர்களை விழா வைத்து பாராட்டுகிறார்கள் என்றால் நீங்கள் கொடுத்த தொகையும் நம்மைப் பொறுத்தவரையில் பெரியது தானே? நீங்களும் இந்த விழாவில் பாராட்டப்பட வேண்டியவர் தானே?” என்று கேட்க, ஒரு நிமிடம் தன் மகனின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனான் முனியசாமி. அவன் தன் மகனுக்கு சரியான பதிலளிக்க முடியாமல் திகைத்தான். இருந்தாலும் தன் பையனை பார்த்து, 


                           “ பிறருக்கு சரியான நேரத்தில் செய்யும் உதவிக்கும் கோயிலுக்கு அளிக்கும் நன்கொடைக்கும் நாம் பாராட்டு எதிர்பார்ப்பது தவறு. கோயில் கும்பாபிஷேகத்தில் என் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொகையை நான் கொடுத்தேன். அதற்கு பாராட்டு எதிர்பார்த்தால் நான் கொடுத்த நன்கொடைக்கு பலன் இல்லாமல் போய்விடும்.” என்று ஒரு வழியாக தன் மகனை சமாதானம் செய்தான் முனியசாமி.


                               நன்கொடை அளவில் சிறியதாயினும் பெரியதாயினும் நன்கொடை அளித்தவர்கள் பிறரால் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான். இருந்தாலும் பிறர் பாராட்டை எதிர்பார்க்காமல் இருப்பது நன்று.

Friday, December 23, 2022

கடையில் ஒரு நகைச்சுவை by Veena Shankar

 


கடையில் ஒரு நகைச்சுவை 


                                      ஒரு பலசரக்கு கடைக்கு சென்ற முதியவர் ஒருவர் ‘சாக்குப்பை கொடுங்க.” என்றார். கடைக்காரரும் “எத்தனை வேண்டும்?” என்று கேட்டபடியே அதை எடுத்து வர உள்ளே சென்றார். “ஒன்று எத்தனை ரூபாய்?” என்று விசாரித்த பெரியவருக்கு உள்ளே சென்றவர் பதிலளிக்கவில்லை. வரும் பொழுது நாலைந்து சாக்குப் பையை தன் கையில் எடுத்து வந்தார். “எத்தனை வேண்டும்?” என்று மறுபடியும் கடைக்காரர் கேட்க, “ஒரு சாக்கு பை எத்தனை ரூபாய்?” என்று மறுபடியும் விசாரித்தார் பெரியவர். “ ஒன்று இருபத்தைந்து ரூபாய் வரும்” என்று கடைக்காரர் சொல்ல, “அவ்வளவு ஆகுமா?” என்று சொன்னவரிடம் “சரி நீங்க பதினைந்து ரூபாய் மட்டும் கொடுங்க போதும் “ என்று அவர் கையில் சாக்குப் பையை திணிக்க, பெரியவர் ஒன்றும் புரியாமல் விழித்து நின்றார். “ என்ன பெரியவரே சாக்கு பை கேட்டு அதை வாங்க இவ்வளவு நேரமா?” என்று கடைக்காரர் கேட்க, “நான் இதைக் கேட்கவில்லை. சாக்குப்பை எனக்கு எதற்கு? என் பேரன் சாப்பிட சாக்குப்பை கேட்டான். அதை கொடுங்க. இன்று அவன் பிறந்த நாள் என்பதால் அவனுக்கு அந்த தின்பண்டத்தை வாங்கிக் கொடுக்க ஆசைப்படுகிறேன்.” என்று சொல்ல, இப்போது கடைக்காரர் விழித்து நின்றார். பெரியவர் சொல்வது என்ன என்பது போல் சுற்று முற்றும் இருந்தவர்களை பார்க்க, அப்போது கடைக்கு தின்பண்டம் வாங்க வந்த சிறுவன் ஒருவன், “தாத்தா சாக்குப்பை கேட்கலை அண்ணே! அவரு “ சாக்கோ பை பிஸ்கட்” கேட்கிறார் என்று சொல்லி கடைக்காரருக்கு புரிய வைத்தான். “ஆமாம். ஆமாம்” என்று தலையை ஆட்டி மறுபடியும் “எத்தனை ரூபாய் அது?” என்று கேட்டார் பெரியவர். தலையில் அடித்துக்கொண்டே “ஒரு பிஸ்கட் இருபது ரூபாய்” என்று சொல்லி எத்தனை வேண்டுமென பெரியவரிடம் கேட்டார் கடைக்காரர். “மூன்று கொடுங்க” என்று சொல்லி ஆசையுடன் தன் பேரனுக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிக் கொண்டு சென்றார் அந்த பெரியவர்.

Thursday, December 22, 2022

காலையில் நான் கண்ட காட்சி by Veena Shankar

 


காலையில் நான் கண்ட காட்சி  


                                         எங்கள் வீட்டில் செய்தித்தாள் வாங்கும் பழக்கம் உள்ளது. நகரத்தில் செய்தித்தாள் போடுபவர் போல செய்தித்தாளை தூக்கி எறிந்து வீசாமல் எங்கள் கதவில் சொருகி வைப்பது எங்கள் ஊர் செய்திதாள் போடுபவரின் வழக்கம். அன்றைய தினம் என் கணவர் வெளியூர் சென்றிருந்ததால், அதை எடுப்பதற்காக என் வீட்டு வெளிக் கதவுக்கு சென்றேன். செய்திதாள் எடுக்க செல்லும் பொழுது என் வீட்டிற்கு வெளியே இருந்து ஒரு என்பது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் எங்கள் வீட்டு கதவின் முன் வைக்கப்பட்டிருந்த செய்தித்தாளை முழுவதுமாக வாசித்து மறுபடியும் அதே போல் சொருகி வைத்தார். இந்த வயதிலும் தன் இயலாமை கண்டு சோர்ந்து போகாமல் தினமும் வெளியில் நடைபயிற்சி சென்று வரும் பொழுது வீட்டிற்கு தேவையானதை வாங்கி வருவார் போல. அதுவும் அவர் கையில் பை இருப்பதை பார்த்து தெரிந்து கொண்டேன்.  


                                      அண்மைக் காலங்களில் செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் வழக்கம் குறைந்து வருவதாக நினைக்கிறேன். இருந்தாலும் அந்த முதியவரை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. யாருக்கேனும் செய்தித்தாள் வாங்கும் வசதி இல்லாவிட்டாலும் அதை படிக்கும் ஆர்வம் அவர்களை விட்டு நீங்குவது இல்லை. மேலும் அந்த முதியவரை பலமுறை எங்கள் ஊர் நூலகத்தில் பார்த்துள்ளேன். மேலே இந்த காட்சியை கண்டதும் என்னால் முடிந்த வரை எங்கள் ஊர் நூலகத்தில் ஏதாவது ஒரு தினசரி தமிழ் செய்தித்தாள் போடும்படி என் கணவரிடம் கேட்க எண்ணியிருக்கிறேன். தெரிந்தவர்களிடமும் விருப்பமிருந்தால் தாங்கள் படித்து முடித்ததும் அன்றைய தின செய்தித்தாளை நூலகத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டி உள்ளேன். உங்கள் ஊரிலும் இதே போல ஆர்வம் உள்ளவர்கள் செய்யலாம். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்பதை தெரிந்து வைத்திருக்கும் நாம் ஒருவரின் அறிவுப் பசிக்கு தீனி போடவும் மறுக்க மாட்டோம் என்று நம்புகிறேன்.

Wednesday, December 21, 2022

தினமொரு சிந்தனை by Veena Shankar

 


அழைப்பு


தொலை தூரத்தில் இருப்பதால் தொலைபேசியில் 

தொடர்பு கொண்டேன் உன்னை 

யாரும் எடுக்கவில்லை 

அலைபேசியில் தொடர்பு கொண்டேன் பதில் வந்தது 

நீ தொலைவில் இருப்பதாக


பெண் சிலை


மழை வந்தது குடை பிடித்தேன் 

மலை மோதியது எதிர்த்து நின்றேன் 

சிலை தோன்றியது மயங்கி விழுந்தேன் 

அச்சிலை ஓர் பெண் என்பதால்


துரோகி


நொந்துகொண்டு திரிந்தேன்  

திரிந்து தெரிந்தேன் 

தெரிந்து தெளிந்தேன்  

தெளிந்து மறந்தேன் 

மறந்து கிடந்தேன் மாற்றுப் பெண்ணிடத்திலே  

துரோகி ஆனேன் என் மனைவிக்கு


என் மனைவி 


தெய்வத்தின் பக்கத்தில் தெய்வமாக சிரித்தாள்  

நிழல் படத்தில் என்னால் தெய்வம் ஆக்கப்பட்ட 

என் மனைவி 


பெண் குழந்தை


நாளை பலிகடாவாக போகிறாள் என்று நினைத்தோ  

ஏனோ அன்று கள்ளிப்பால் கொடுத்தாய் அப்பெண் குழந்தைக்கு


நச்சு பேச்சு

அரசியல்வாதியிடம் இலவசமாய் பெற்ற தண்ணீரும் 

கசந்தது அதில் நச்சு பேச்சு கலந்திருந்ததால்


வரவு

திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முன் அவளுக்கு தாலி 

தொங்கிக் கொண்டிருந்தது அலைபேசியின் வரவால் 


காசு


அடிக்கடி அழைப்பதற்கு அலைபேசி 

சுடச்சுட செய்திகளுக்கு வலைதளம்

தொட தொட மயங்குவதற்கு கணினி 

சட்டென வேலைக்கு இயந்திரம் 

இத்தனையும் வாங்கலாம் தித்திக்கும் காசிலே 

ஆனால் இதயம் வெடிக்கும் வாங்கி கொடுப்பவற்கு


பெயர் பலகை


ஊருக்குள் நுழையும் முன்னே வரவேற்றது 

ஊர் பலகை சிறியதாய் 

கோயிலுக்குள் நுழையும் முன்னே வரவேற்றது 

நன்கொடையாளர்களின் பெயர் பலகை

மிகப் பெரியதாய்


ஓட்டு


மக்கள் ஓட்டு போட்ட தலைவர் வென்றார் 

மக்கள் தோற்றனர் 

தங்களுக்கு ஏதும் விடிவு பிறக்காததால்

காட்சிகள் மாறலாம் கட்சிகளின் மனம் மாறாது 

ஓட்டுக்கு பணம் என்பதிலிருந்து 


வெற்றி


இலையைப் பறிப்பதால் செடி உயிர் விடுவதில்லை 

ஆனால் தோல்வி கண்ட மனம் மட்டும் 

எடுக்கிறது தற்கொலை முடிவை செடியின் இலைகள் 

போலத்தான் தோல்வியும் விட்டுவிடுங்கள் அதனை

துளிர்விட்டு வரும் புதிய இலைகள் போல 

எதிர்காலத்தில் காத்திருக்கும் வெற்றி எனும் மரம்


கலை


கவிஞனின் கற்பனை கவிதையானது

அர்த்தமுள்ள வார்த்தைகளால்

சிற்பியின் கற்பனை சிலையானது 

பரம்பொருளை அழகாக செதுக்கியதால்


கடலே!


கடலே! உன்னையும் அழிக்க புறப்பட்டு விட்டான் மனிதன் 

உன்னை குடிநீர் ஆக்கும் முயற்சியில்


சிரிப்பு


கோடி பூக்கள் பூத்தாலும் தாவரத்தின் முதல்  

பூவே அங்கீகாரம் 

அதன் இனத்தை கண்டறிய முடிவதால் 

பலவகை சிரிப்புகள் காட்டினாலும் குழந்தையின் 

பொக்கை வாய் சிரிப்பே சிரிப்பு அதன் 

வெள்ளை மனம் தெரிவதால்


ஞானி


சிக்கலான பாதையைத் தேர்ந்தெடு 

உன் மதியை விரிவுபடுத்த 

வாழ்க்கையில் கஷ்டம் அனுபவி 

உன் விதியை எதிர்நோக்க 

தீய நண்பர்களுடன் சேர் 

சதியை வெல்ல - நீயும்

ஒரு நாள் பேசப்படுவாய் ஞானி என்று


விவாகம்


விவாகம் செய்யாத முதல் மனைவியாய் அலைபேசி 

அதனால் விவகாரமாய் போனது 

என் விவாகமும் நின்றது விவாகம் ஆகாமலேயே


விடியலுக்கான கனவு

 

அன்று ஒருநாள் இரவு நேர கனவு கண்டேன் 

என் விடியலுக்காக

விடிந்ததும் பார்த்தேன் என் கனவு படுத்திருந்தது 

நான் இருந்த அனாதை இல்லத்தில்


நம்பிக்கை துரோகம்

 

நம்பிக்கை கொண்டு பிறந்தேன் 

நம்பிக்கை கொண்டு வளர்ந்தேன் 

நம்பிக்கை கொண்டு படித்தேன் 

நம்பிக்கை கொண்டு இருந்தேன் என் காதலில்

துறந்தேன் என் காதலை அவள் 

நம்பிக்கை துரோகம் செய்ததால்

Tuesday, December 20, 2022

இந்த வாரத்தலைப்பு தையல்காரர் by Vidhya Nivash

 


தையற்காரர் தன் கனவை பிறரணிய கனவு காணும் கலைவாணர்....

 புது துணி தைக்கும் தையல்காரரோ பலரும் அறிவர் .

ஆபத்துக் காலங்களில் துணியை சரி செய்து தருவாரோ கடவுளாக தோன்றுவர்.  

புதியதை தைக்கும் தையற்காரை கண்டுபிடித்து விடலாம்.. 

ஆனால் தினமும் தையல் வண்டியை தள்ளிக் கொண்டே சாலையில் வரும் கிழிந்ததை தைக்கும் தையல்காரர்கள் பார்ப்பது  அரிது இன்று. 

பார்த்தவுடன் நம்மை காட்டும் கண்ணாடி அவர் அணிந்திருக்கும் ஆடையே. அந்தப் பெருமையை தட்டி செல்பவர் தையக்காரரே.

 உடைந்து போன மனதை தைக்க எப்படி தேவைப்படுவாரோ நண்பர் அதேபோல ஆபத்தில் நீயும் ஒரு நண்பரே.

 உன் கனவை என்னில் வடித்து கண்டாய் நாங்களும் நன்றி என்று சொல்ல மறந்தோம் .

 இது ஒரு வாய்ப்பாக பல நன்றிகள் சமர்ப்பிக்கிறோம் தையல்காரர்களுக்கு இங்கு...

 இதில் ஆச்சரியம் என்னவென்றால் பெண் தையற்கார்களை விட ஆண் தையல்காரர்களே பெண்களுக்கு தைப்பர் நேர்த்தியாக...

இந்த வாரத்தலைப்பு தையல்காரர் by Rishi

 


தொன்று தொட்டு இன்றுவரை

தொடர்ந்து கொண்டே இருக்கும்

தொழிலில் தையலும் ஒன்றே!!!

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்,

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்,

பழமொழி அனைவரும் நன்கு அறிந்ததே!!!

பலருக்கு இன்றும் கைக்கொடுக்கும்

தொழில் இதுவே... அக்காலத்தில் விழாக் காலங்களில்

மட்டுமே இலாபம் கிட்டியது...

இன்று விரல்விட்டு

எண்ணும் அளவிற்கு

வந்து விட்டது...

சில பெண்கள் 

வீடுகளில் தன் கையே தனக்குதவியாக

தைத்துக் கொள்கின்றனர்...

 ரெடிமேட் ஆடைகள்

இருந்தாலும்,

இன்றும் பள்ளிக்

குழந்தைகளின் சீருடைகளை 

அளவெடுத்து 

கச்சிதமாக தைக்க


அவர்களால் மட்டுமே


இயலும்...

இந்த வாரத்தலைப்பு தையல்காரர் by Akhiladevi Kumaran

 




இந்த வாரத்தலைப்பு தையல்காரர் by Jayanthi

 




இந்த வாரத்தலைப்பு தையல்காரர் by Veena Shankar


  வாழ்க்கை சக்கரத்தை ஓட்ட தையல் எடுக்கும் ஆயுதம் தையல் இயந்திரம்

அணியும் ஆடையின் இயக்குனர்

பிறரால் ஈர்க்கின்ற உடையினை தன் உழைப்போடு ஊசியால் எளிதில் நூல் ஏற்றி ஐயமில்லாமல் ஒன்றிணைத்து ஓரமாய் தையலிட்டு ஒளடதமாய் நம் மானத்தை காக்கும் துணையாளர்

 தங்கள் தவறுகளையும் மாற்ற தெரிந்தவர்கள் தையல்காரர்கள் பேஷன் என்ற பெயரில், அதுவும் மக்களின் தேவைக்காகவும் ஆசைக்காகவும்


Monday, December 19, 2022

சமையல் சந்தேகம் by Veena Shankar

 


சமையல் சந்தேகம்


தலைவலியோடு வீட்டிற்குள்ளே வந்த வந்தனா, பில்டர் காபி போட்டு குடித்தாள். மணி ஏழரையை தொட ராத்திரிக்கு என்ன டிபன் செய்யலாம் என ஆபீஸ்லையே முடிவெடுத்து வந்திருந்தாள். தன் கணவன் முகுந்தனுக்கு பிடித்த பால் கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தாள். திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தனி குடுத்தனம் வந்த வந்தனாவுக்கு சமையல் அவ்வளவு தெரியாது என்றாலும் தன் அம்மாவை கேட்டு கேட்டு செய்ய தொடங்கினாள். ஒரு மாதம் வரை ஹோட்டல், மெஸ் , ஸ்விக்கி என்று ஆர்டர் செய்து சாப்பிட்டனர். சில உடல் உபாதைகளின் காரணத்தினால் தானே சமைக்க முடிவெடுத்தாள் வந்தனா.


 தன் அலைபேசியை கையில் எடுத்தாள். "அம்மா இன்னைக்கு ராத்திரிக்கு முகுந்தனுக்கு பிடிச்ச பால் கொழுக்கட்டை செய்யலாம்னு இருக்கேன். கொஞ்சம் செய்முறையை சொல்லுமா" என்றாள். "இப்பத்தான் யூட்யூபில் வருகிறதே. அதை பாரு. உன் வயசுல நான் இருக்கும் போது இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டேன். வயதுக்கு வந்து விட்டாலே சமையல்கட்டு பக்கம் எட்டி பார்க்கணும். இல்லைன்னா தோலை உரிச்சிடுவாங்க எங்க அம்மா. உப்பு , புளி எல்லாம் அம்மா அளவு சொல்ல , நான் தான் சமையல் செய்வேன். உன்னை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. நீ டான்ஸ் கிளாஸ், டியூஷன்னு நிறைய படிக்க வேற இருந்தது . அதனால நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல." என சொல்ல , "அம்மா!ரெசிபி மட்டும் சீக்கிரம் சொல்லுமா. நேரமாகுது. முகுந்தன் வந்துடுவாரு" என்று வந்தனா சொல்ல, "நானும் இன்னைக்கு அப்பாவுக்கு பிடிக்குமுன்னு பால் கொழுக்கட்டை செய்யலாம்னு இருக்கேன். அதனால முடிஞ்சா எட்டு மணிக்கு வீடியோ கால்ல வா. இல்லைன்னா இன்னைக்கு மட்டும் ஸ்விக்கி ல ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க. நாளை காலையில பார்த்துக்கலாம் ." என சொன்னதும் " அம்மா! இல்லம்மா ஷார்ப்பா எட்டு மணிக்கு வீடியோ கால் பண்றேன். இன்னிக்கு முகுந்தனுக்கு பிறந்த நாள். என் கையால அவருக்கு பிடிச்சதை செய்யணும்னு ஆசைபடறேன். " என்று வந்தனா சொன்னாள். " ஆமா! காலையில மாப்பிள்ளைக்கு விஷ் பண்ணதையே மறந்துட்டேன்." என்று அம்மா சொல்லி வந்தனாவின் அழைப்பை துண்டித்தாள். மணி எட்டானதும் வந்தனா அம்மாவிற்கு வீடியோ கால் போட, அம்மா ஒவ்வொன்றாக சொல்ல, இரு வீட்டிலும் பால் கொழுக்கட்டை அரங்கேறியது. நடு நடுவே வந்தனாவின் அப்பாவும் தலையைக் காட்டினார்.


 ஆறு மாதங்கள் சென்ற நிலையில் மறுபடியும் ஏற்கனவே தான் கேட்டு சமைத்திருந்த வத்தல் குழம்பு பற்றி வந்தனா தன் அம்மாவிடம் கேட்க," யூடியூபில் பார்த்துக் கொள்" என்ற அம்மாவுக்கு "எனக்கு நீங்க செய்யற டேஸ்ட் வேணும். அதனால தான் கேட்கிறேன்" என்று வந்தனா கோபப்பட, "வந்தனா! 'எங்க ஊர் சமையல் போய்' பார் " என்றாள் அம்மா. "அந்த சேனல் நல்லா இருக்குன்னு லதா ஆபீஸ்ல சொன்னா " என்று வந்தனா சொல்லவும் "அடி மக்கு! அது என்னுடைய சேனல் டி. உனக்கு ஒவ்வொரு ரெசிபி சொல்லிக் கொடுக்கும் போதும் உன் அப்பா அதை வீடியோவா பிடிச்சு சேனல்ல போட சொன்னாங்க. புது சேனல் ஆரம்பிச்சது பற்றி நான் மாப்பிள்ளை கிட்ட சொன்னேன்." என்றாள் அம்மா. "ஆமா! அவரு என்கிட்ட சொன்னாரு. ஆனா அது உங்க சேனல்ன்னு எனக்கு தெரியாது. அவருக்கு சமையல் பற்றி என்ன தெரியும் என்பதால் நான் அதை பெருசா எடுத்துக்கல. ஆனால் புதுசா ஆரம்பிச்ச சேனல் பத்தி ஏன் நீங்க என்கிட்ட சொல்லல? ஆரம்பிச்சு எத்தனை நாள் ஆகுது? " என செல்லமாக கடிந்து கொள்ள, "நான் உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சப்போ, அப்பா இப்ப சொல்ல வேண்டாம். இன்னும் ஏதாவது ஒரு ரெசிபியை வந்தனா இரண்டாவது முறையாக கேட்கும் போது சொல்லிக்கலாம். ஆனால் மாப்பிள்ளை கிட்ட மட்டும் சொல்லு என்று சொல்லிட்டாரு. ஆனாலும் மாப்பிள்ளை உனக்கு ஜாடையாக சொல்லியிருக்கிறார் . உனக்கு தான் தெரியும் இல்ல நான் அப்பா பேச்சை கேட்கிறவள் என்று" அம்மா சொன்னதும் நான் தான் முகுந்தன் சொன்ன பேச்சைக் கேட்கவில்லை என்று தன்னையே நொந்து கொண்டு தன் அம்மாவின் சேனலுக்கு ஒரு லைக் போட்டு வீடியோவை பார்க்க தொடங்கினாள் வந்தனா.

Arigato அனுபவங்கள் - Arigato#1

 


Arigato அனுபவங்கள்

Arigato #1 - நரிடாவை நோக்கி.. 


டிசம்பர் 6 ‍- 3:15 am ‍ 

டிசம்பர் 7 - 3:20 am

டிசம்பர் 8 - 3:45 am

.

.

டிசம்பர் 11 - 4:50 am ‍ 

டிசம்பர் 12 - 5:15 am

டிசம்பர் 13 - 4:50 am

டிசம்பர் 14 - 5:20 am

டிசம்பர் 15 - 5:15 am

பத்து நாட்கள் கடந்த பின்னும், அலாரமின்றி, இன்னும் ஜப்பான் நேரத்திற்கே, என் உடலும், மனமும் இயங்கிக் கொண்டிருந்தது!

இதை just like that “JET Lag” என்று சொல்லி கடந்து செல்ல முடியவில்லை..  3-4 நாட்கள் ok? But 15 days??!! Something fishy!

RJ Balaji style சொல்லனும்னா எதோ ஒரு "அமானுஷ்ய சக்தி"னு சொல்லலாமோ? JAPAN lag-அப்படி சொல்லிக்கலாமோ? அப்போ கூட Japan lag-னு சொல்ல மாட்டேன்! Japan Lead-னு தான் சொல்லனும்னு நினைக்கிறேன்! 

எது எப்படியோ, இதுக்கு முன்னாடி 12 countries tour.. Historic sites, wildlife destinations, scenic places போயிருந்தாலும்அதைப் பத்தி எழுதனும், share செய்யனும்னு தோணலை… First time felt so..in that Japan leads! 

வியக்க வைத்தது இடங்கள் மட்டுமல்ல..ஈர்க்க வைத்தது ‍‍எண்ணற்றவை ‍ -இயற்கை, இயந்திரங்கள், இயக்கங்கள்எல்லாத்துக்கும் மேல - ‍" மனிதர்கள்”.

திரும்பி வந்தது ‍Dec 5th..இந்த Early rise on Dec15th- எனக்கு ஏதோ செய்யத் தூண்டியது..இதோ எழுத உக்காந்துட்டேன்!

Japan tourism- சுற்றுலா கதவுகள் ரொம்ப late தான் October-ல‌ open ஆச்சு.  உடனே தயாரானோம். Previous wide spectrum of toursக்கு அப்புறம், Bhutan & Japan தான் எங்க மனதில் தோன்றிய, எங்களை ஈர்த்த‌ கிழக்கு ஆசிய‌ நாடுகள். Bhutan-க்கு போறதுக்கு 2 வருஷத்துக்கு முன்னாடி plan பண்ணோம்..set ஆகலை. Bhutan மலைகள் இன்னும் எங்களை அழைக்கவில்லை போல‌! Right time இன்னும் வரலை..இயற்கையின் அழைப்புக்காக காத்திருப்போம்!

Travel planning- ஜப்பான் பத்தி Google- ரொம்ப ஆராய்ச்சி செய்யலை… purposefully தவிர்த்தேன்..except for flight, hotel & local guide bookings, Google/other apps நாங்க use பண்ணலை. அதுக்கு முக்கிய காரணம்மனசையும், நிகழ்வுகளையும் முடிஞ்சவரை open வெச்சுக்கலாம் என்று தான்! Once we research more, I feel we get into validation mode…Judgmental mode on ஆகி excitement mode off ஆகிடுதுன்னு நான் feel பண்றேன். Also, Safety & Systematic approach in Japan எங்களை coolஆக இருக்க‌ வைத்தது.

Ok now, flight mode ON!

முதல்ல Flight ticket booking முடிஞ்சவுடன்,  6 days & 5 nights excel sheet பதிவு செய்தோம். Tokyo சென்று Osakaவிலிருந்து return plan!

2 நாள் - TOKYO மாநகரம்; 1 நாள் புல்லட் ரயிலில் tokyoவிலிருந்து osaka பயணம்; 2 நாள் - KYOTO மாநகரம் - இது தான் high level plan(இதில் ஸ்வாரசியமான இடங்கள் ‍surprise- பின்னர் சேர்ந்துச்சு luckily..அதை போகப் போக சொல்கிறேன்!)

Full trip individual family package இல்லாமல் நாங்க செல்லும் முதல் பயணம் இது! போகும் தூரம் தெரியும்; இடம் தெரியும்; எப்படி தெரியும்! எங்கே, ஏது, என்ன‍னு பார்த்துக்கலாம்னு கிள‌ம்பிட்டோம்.  

பக்கா planners, trackersலாம் ஓரங்கட்டிட்டு, பல சவால்களையும் எதிர்கொள்ள ஜோரா ஜப்பான் புறப்பட்டோம் ‍- with essential bookings like: 

** Hotel bookings(Agoda website)

** Bullet train booking(rail ninja)

** Airport transfer from Narita to Tokyo(Klook app)

** Day tour in Tokyo with local guide(Toursbylocals site)

** Day tour in Mt. Fuji & Hakone(Klook)

** Day tour in Kyoto with local guide(Viator)

** Day tour in Nara with local guide(City unscripted)


Itinerary முடிவானவுடன், எல்லா printouts கையில் எடுத்துகொண்டு Japan embassy சென்று விசா விண்ணப்பம்...5 நாட்களுக்குள்ள 5 வருட multiple entry விசா வந்தது! நாங்க கேட்டது single entry தான்..ஆனால் Indiansக்கு அதே 30 dirhams fees - multiple entry வாங்கிக்கோங்க என்று embassy பெண்மணி அன்புக் கோரிக்கை- 5 வருஷம் என்னை தரிசிக்கலாம்னு எங்க காதுல Japan சொன்னது சந்தோஷமா இருந்தது(போவோமோ இல்லையோ, போக முடியும் என்ற விஷயமே bonus தானே..) புன்னகையுடன் ஏற்றோம்! 

அடுத்த முக்கியமான step - share பண்ண விரும்புறேன் - VISIT JAPAN WEB registration online!



92 பக்க manual இருக்கு‍ ஆனா website ரொம்ப easy & user-friendly. நிறைய videos YouTube இருக்கு. நாம எல்லா தேவையான documents for Quarantine, Immigration & Customs upload செய்யனும். Scanning, verification - எல்லாமே instantly done- பக்கா systematic! 

ஒவ்வொரு பயணிக்கும் மூணு விதமான colour codes -3 விதமான QR codes வரும். Narita Airport இறங்கியவுடன் smartphoneல‌ காட்டணும். நாங்க safetyக்கு printouts-உம் வெச்சிருந்தோம்! 


 Ok now, flying mode ON! 

துபாய் சென்றடைந்தோம்நுழைந்ததும் என்னை கவர்ந்தது‍ - FIFA 2022 world cup - 
Mega size football model. 
ஒரு fanஆ மட்டும் இல்லாம‌- recent viral video ஞாபகம் வந்தது.   
Qatar stadiumல ஆட்டம் முடிந்ததும், வெற்றி, தோல்வி என்று பாராமல், Japanese fans stadium சுத்தம் செய்து வியப்பில் ஆழ்த்தியது! 

 Honestly, I witnessed their trash cleanup attitude - literally everywhere I went in Japan! Big salute to them!


Emirates terminal போய் சேர்ந்தோம்.. ஆட்கள் யாருமின்றி, பெட்டிகள் கழுத்தில் மணி போல bagtags  மாட்டிக் கொண்டு, தன்னைத் தானே சம்ர்த்தாக‌ கூட்டிக் கொண்டே சென்றது முதல் முறை நான் பார்த்தேன்..பெட்டிகளுக்கு  குட்டி byebye சொல்லிவிட்டு ‍Loungeஇல் கண்ணுக்கு FIFA football match விருந்து கொடுத்து, வயிற்றுக்கும் சிறிது அளித்து காத்திருந்தோம்!

முதல் முறை Arabic sweet Luqaimat(meaning little bites) try பண்ணேன்!‍  

பார்க்க Gulab Jamun மாதிரி இருந்தாலும், எனக்கென்னவோ rasgullaவைநினைவு படுத்தியது - because அந்த syrup இல்லாவிட்டால் bland இருந்துச்சுஇது ஒரு traditional Emirati dish.. 

ரமதான் மாசத்துல எல்லா Iftar-லயும் இருக்கும்னு சொல்லுவாங்க! 

With slight variations in texture and sweetener, they are known as zalabia in Egypt; aweimat (floaters) in Lebanon and Syria; and skaramati in Somalia-:)


 'Airport of the Year' award வென்ற‌ Dubai airportக்கு ஒரு அழகான‌ Arigato சொல்லிவிட்டு A380 விமானத்தின் கீழ் தளத்தில் நுழைந்தோம்! Already Japanக்குள்ள நுழைஞ்ச மாதிரி இருந்தது…flight fully Japanese and Arab crowd!

அகண்ட வான்பரப்பின் நடுவே..7987kms- 4962 மைல்கள் வானூர்தி ஊர்ந்து சென்றது

கிட்டத்தட்ட 10 மணி நேரப் பயணம்..இடையிடையே Emirates இரண்டு வேளை வயிறார சுவையான Asian vegetarian meal உணவளித்து மகிழ்வித்தது! 

கன்னிப்பையனின் வாழ்க்கைச் சங்கடங்களை - காமெடி கலந்து அளித்த கன்னட திரைப்படம் Hareesha vayassu 36  சில‌ மணி நேரத்தை விழுங்கியது! 36 வயதினிலே ஜோதிகா rangeக்கு எதிர்பார்த்து, பார்க்க ஆரம்பிச்சேன்…but, Bachelor பரிதாபங்களை சிரிப்புடன், சிறப்பாக படைத்திருந்தார்கள்..சில நொடிகளே வந்தாலும், அந்த அப்பா character மற்றும் மாணவியாக வரும் கல்யாணத் தரகர் character ரொம்ப ரசிக்கும் படியா இருந்ததுஅடடே...track மாறி பயணக் கட்டுரை, சினிமா விமர்சனமாயிடும் போல…Break போடுவோம்…!


6852 தீவுகள் சூழ்ந்த Japanese Archipelago-வில், Narita International Airport வந்துடுச்சு...இறங்குவோம்!! 


பயணம் முடிஞ்சு நாங்க ஜப்பானில் கால் வைத்த நேரம் ‍ 5:45pm; 12 degree celsius! அமைதியான ஆரவாரமற்ற விமான நிலையம்‍ பார்த்த வண்ணங்கள் ‍ - கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்கள்! 

10 அடிக்கு ஒரு வயதான மூதாட்டியோ, மூத்த குடிமகன்களோ, QR code அட்டையைக் கையில வெச்சிகிட்டு வழி காட்டினாங்க.. ‍மிக முக்கியம்- ‍ சிரித்த முகத்துடன், குனிந்து குனிந்து Arigato சொல்லி கொண்டே! 


10‍-15 நிமிஷத்துக்குள்ளே, பெட்டிகளுடன் வெளியேறினோம்! 


Placard வெச்சுகிட்டு நின்ற ஜப்பானிய முகம் புன்சிரிப்புடன் வரவேற்று சொன்ன முதல் வார்த்தை ‍ “No English”.

சிரிப்பை திரும்ப அளித்து விட்டு, SIM Card கடை நோக்கிச் சென்று முதல் வேலையாக ‍wifi sim வாங்கினோம்! YENகளில் எங்கள் முதல் கொடுக்கல்‍ வாங்கல்! இந்த wifi கார்ட் வாங்கியதற்க்கு பல முறை எங்களுக்கு நாங்களே Arigato சொல்லிக்கொண்டோம் ‍- all 6 days!! Google-இன்றி ஒரணுவும் அசையாதல்லவா?! உலகின் எந்த மூலையில் இருந்தாலும்உற்ற நண்பன் அவனே! 


சிறு சாரல், மழைத்துளிகளுடன் ஒரு மணி நேரப் பயணம்‍ Naritaவிலிருந்து TOKYOநகரின் IKEBUKURO என்ற இடத்தில் உள்ள METROPOLITAN Hotelக்கு சென்றோம். 



   Taxi driverக்கு முதலும் கடைசியுமான TIPS -அன்று நாங்கள் அளித்தது...வேறு எங்குமே tips வாங்க மறுத்தார்கள் ‍-புன்னகையுடன்! ஜப்பானியர் அதை விரும்புவதில்லை என்றும் படித்திருக்கிறேன்அழகான அலங்கரிக்கப்பட்ட X-mas மரம் hotel receptionஇல் வரவேற்றது! ஹோட்டல் அறையும் நாங்க எதிர்பார்த்ததை விட பெரியதாக இருந்தது! Tokyo centre of cityஇல் space மிகப்பெரிய constraint உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்!

அழகான அலங்கரிக்கப்பட்ட X-mas மரம் hotel receptionஇல் வரவேற்றதுஹோட்டல் அறையும் நாங்க எதிர்பார்த்ததை விட பெரியதாக இருந்தது! Tokyo centre of cityஇல் space மிகப்பெரிய constraint உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்

இரவு மழையில், குடைகளுக்குள் ஒளிந்து, ஈரக் காற்று காதுகளை இதமாக வருட

Mexican restaurantஇல் இரவு உணவை முடித்து

Arigato சொல்லிவிட்டு, அடுத்த நாள் விடியலுக்காக காத்திருந்தோம்!

ஜப்பான் உலகுக்கு அளித்த பல கொடைகளில் ஒன்றான -HAIKU - 5 -7- 5 syllable magic! 

ஹைக்குவரிகளில் , ஒரு சிறு முயற்சியுடன், இந்த பதிவினை Arigatoவுடன் நிறைவு செய்கிறேன்! 


அகண்ட வான்பரப்பில் ஜொலிக்கும் விண்மீன்க‌ள் ஒளியால்!

ஆழியில் ஜப்பான் தீவுகள் ஆயிரம் ஆயிரம்.. ஜொலிப்பது உழைப்பால்!

வெற்றிக்கு வித்திட்ட விந்தைகளை..விடியலில் சந்திக்க!! 


மீண்டும் சந்திப்போம்..அடுத்து வருவது Tokyo Day 1 - Imperial Palace  பயணம் -Arigato‍வுடன்!

- அன்புடன் அகிலா🙏



பின் குறிப்பு: திரும்ப திரும்ப தோன்றிய “Arigato” என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்‍.. ஆமாம்‍ அதன் அர்த்தம் ‍"நன்றி" தான்! Arigato gozaimasu means THANK YOU!  

அத்துடன் இடை இடையே என் English மற்றும் Tanglish, மாறி மாறி இடம்பெறும் பேச்சுத் தமிழ், செந்தமிழ் நடையைப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்‍

Please “Uketamo”.. இந்த நடையில், என் மனதை direct -as it is express பண்றதா உணர்கிறேன்!

 நன்றி. வணக்கம். மீண்டும் சந்திப்போம்!!















இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...