Sunday, August 4, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



 பூ மலர்ந்தது  

நுகரும் வண்டின் வரவை தேடி 

தோட்டத்து பூ காத்திருப்பது அல்லாது 

பாவையும் ஏங்கி நின்றாள்

தானும் மலர

கையில் இருப்பு இல்லையெனில்

வாழ்க்கையும் காத தூரம்

வரனும் வரணும் நல்வரவோடு என்றிருக்க

காலம் கடந்த பின்

காதல் பிறக்குமா?

வந்தவன் கொண்ட பின்னும் காதல் பரிசாய் பிஞ்சும் 

உதிக்குமா?

உதித்த பிஞ்சு வளர

உடலில் ஆரோக்கியம் கொள்ளுமா?

காதல் கரங்கள் பற்றினால் மட்டுமே

பிஞ்சுக் கரங்கள் நெஞ்சை வருடும்

அதன் சிரிப்பால் 

பிறப்பு கொடுப்பதில் மட்டுமல்ல

 படைப்பவனின் கடமை

நன் முறையில் வளர்ப்பதிலும் உண்டே!

இவள் ஏக்கம் தீர

மணவாளன் வரும் 

நேரமும் நாளும் எதுவோ?

பத்திரிக்கை கூட தேவையில்லை

பாந்தமாய் பத்திரமாய் கைகள்

இணைந்தால் மட்டும் போதுமே!

போதும் என்று

 சொல்லுமோ இந்த உறவும் பந்தமும்

இறுதி வரை நடை பயிலும் மனங்கள்

திருமணத்தில் ஒன்றிணைந்தால்

வரமும் வரும்படியே இக்கலி காலத்தில்

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...