Monday, September 30, 2024

இரவில் ஓர் இசை by Veena Shankar

 


இரவில் ஓர் இசை 


என் நெருங்கிய நண்பரின் பேத்திக்கு போன வாரம் சென்னையில் திருமணம். அதற்கு சென்ற மாதமே பத்திரிக்கை வைத்து, அப்பா இல்லாத காரணத்தால் நான் தான் திருமணத்தை முன் நின்று நடத்தி தர வேண்டும் என்று அவர் மகன் கேட்டுக் கொள்ள , திருமணத்திற்கு முன் தினமே சென்னை சென்றேன். ரயில் பயணம் என்றாலும் தற்போது வயது மூப்பு காரணமாக அசௌகரியம் அதிகம் தான். ஆனால் போக வேண்டியதற்கு போய் தானே ஆக வேண்டும். என் பயணம் பிற பயணியரின் குறட்டையில் இனிதே கலந்து இருந்தது.


 மறுநாள் காலை மேற்படி இடத்தில் இறங்கி எல்லோரையும் நலம் விசாரித்து குளித்து முடித்து பக்கத்திலிருந்த கோயிலுக்கும் இன்ன பிற உறவினர்கள் வீட்டிற்கும் சென்று வர மாலையானது. மாப்பிள்ளை அழைப்பும் படு ஜோராய் முடிந்தது. இரவு உணவு விருந்து முடித்து வந்த பின் எனக்காக அறை ஒதுக்கப்பட்டிருப்பதாக நண்பரின் மகன் சொல்ல , சொன்ன அறையில் வேறு சிலரும் தங்கியிருப்பது தெரிந்து கதவை நான் தட்ட, என்னை போல் தனித்து வந்த என்னை ஒத்த வயதுடைய மற்ற மூன்று பேருக்கும் ஒரே அறை என்பதை தெரிந்து கொண்டேன். முன்தின தூக்கமின்மையும் அன்றைய பயண அலுப்பும் என்னை தொற்றிக் கொள்ள மெத்தையின் ஒரு ஓரத்தை எனதாக்கி கொண்டேன். ஆனால் அது சொற்ப நேரமே நிலைத்தது. என்னை விட சற்றே வயதில் முதிர்ந்தவர் தனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உபத்திரம் இருப்பதால் தனக்கு மெத்தையின் ஓரமே வசதி என்று சொல்ல அவருக்கு விட்டுக் கொடுத்தேன். சரி , இதிலென்ன ஆகி விடப்போகிறது என்ற மனோ பாவத்தில்.


அலுப்பு இருந்தாலும் வழக்கமாக பன்னிரெண்டு மணி வரை முழித்திருப்பதால் அதற்கு மேல் தான் எனக்கு தூக்கம் வரும். அதனால் என் அலைபேசியோடு உரையாடிக் கொண்டிருந்தேன். சொற்ப நேரத்தில் மெல்ல தூக்கம் வருட, மற்ற எல்லோரும் ஆழ் தூக்கத்தில் இருப்பதை உணர்ந்து தண்ணீர் குடித்து தலை சாய்த்தேன். நடுவில் நான் படுக்க, மற்ற இருவர் பக்கங்களிலும் தலைமாட்டில் ஒருவரும் என்னை சுற்றி அரணாக படுத்து இருந்தனர்.


என் தூக்கத்தின் நடுவே ஒரு புது விதமான இசை என்னை எழுப்ப, ஓ இது அந்த பாடலின் இசையாயிற்றே என்று நினைப்பதற்குள் வெவ்வேறு பாடல்களின் இசை என்னை நினைவு படுத்த , மெல்லிசை கச்சேரி போல என் மனதினுள் பல பாடல்கள் மாறி மாறி ஓட, மெல்ல விழித்து பார்த்தேன். என்னிடம் கடன் கேட்டு இடம் பிடித்த நபரின் தூக்கத்தில் பிறக்கும் இன்னிசை ஒலி அதுவென உணர்ந்தேன். ஆனால் இது புது வித அனுபவம் எனக்கு. குறட்டையில் சங்கீதம் கூட வரும் போல என்று நினைத்து மறுபடியும் படுத்தேன். 


பல நிமிடங்கள் கடந்த நிலையில் மற்றொருவரின் பெருமூச்சு என்னை படுக்கையிலிருந்து காத தூரம் விலக்கியது. குளிர் வசதி கொண்ட அறையும் அவரது பெருமூச்சு கொண்ட குறட்டையில் உஷ்ணமானது.  


சரி தான் என தலையை சொறிந்த படியே சிறிது நேரம் கடத்திய நான், என் தலையணையை எதிர் பக்கம் போட்டு படுக்க முயல, தலைமாட்டில் படுத்திருந்தவர் "என்னப்பா! அவங்க ரெண்டு பேரும் ஒரே பக்கம் படுத்திருக்கும் போது எதிர் திசையில் அப்படி படுக்க கூடாது " என்று இலவசமாய் என்னிடம் அறிவுரை சொல்ல, " இந்த குறட்டை சப்தத்தில் எனக்கு தூக்கமே வரல" என்று புலம்பியபடி அலுத்துக் கொண்டவர் தன் தலையணையை எதிர் திசைக்கு மாற்றி வசதியாய் படுத்துக் கொள்ள, அலைபேசியில் மணியை பார்க்க மணி இரண்டை தாண்டியிருந்தது.  


 யாருக்கும் இரண்டு முதல் ஐந்து மணி வரை தூக்கம் கண்ணை கட்டும் என பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். சரி இனியாவது தூக்கம் வரட்டும் என்று நினைத்து தூங்க ஆரம்பித்தேன்.


 இம்முறை சில மணித்துளிகள் கடந்த நிலையில் மழையில் சப்தமிடும் தவளை போன்ற ஒரு சப்தம் என்னை நித்திரையிலிருந்து எழுப்ப, நான் வெட்டவெளியில் மழை தண்ணீரில் படுத்திருக்கிறேன் போல என்ற உணர்வு என்னுள் வர, இறுக மூடிய விழிகளை விரைவாய் திறந்தேன். மற்ற இருவரின் குறட்டையால் தனக்கு தூக்கம் வரவில்லை என்று சொன்னவரின் சப்தம் தான் அது. இன்றும் தூக்கம் அம்பேல் என்று நினைத்தபடியே தலையணையை காதில் வைத்து படுக்க முயற்சித்தேன்.


 தூக்கம் வந்ததோ இல்லையோ என் அடுத்த நிகழ்ச்சிக்கான புதிய இசை வடிவம் என்னுள் புகுந்ததை என்னால் உணர முடிந்தது. அதை உடனே பதிய வேண்டி என் அலைபேசியை எடுத்து குறித்துக் கொண்டேன்.


குறட்டையிலும் இசையை உருவாக்கியவன் உலகில் நான் ஒருவனாக தான் இருக்க முடியும் என்ற நினைப்போடு அந்த இரவை குறட்டையின் இசையால் இனிதே கழித்தேன்.


ஒரு புதிய முயற்சியில் வெற்றி பெற்றவனாக அடுத்த நாள் நடந்த திருமணத்தில் இரட்டை பூரிப்போடு கலந்து கொண்டேன்.


குறட்டையை சப்தமாக நினைக்காமல் ஒரு இசையாகக் கருதி உங்கள் இரவு நேர தூக்கத்தை தொடருங்கள்.

Friday, September 27, 2024

திருட்டும் தண்டனையும் by Veena Shankar

 


திருட்டும் தண்டனையும்


திருடி விட்டு ஜெயிலுக்கு வந்த திருடனிடம் " மீண்டும் மீண்டும் ஒரே குற்றத்திற்காக எத்தனை முறை பிடிபட்டு ஜெயிலுக்கு வருவே. கொஞ்சம் திருந்தி வாழக்கூடாதா? " என்று கூண்டுக்குள் நின்றிருந்தவனிடம் நீதிபதி கேட்டார். 


" ஐயா! என்ன பண்றது? நம் சட்டத்துல ஓட்டை இருக்கு" என்று திருடன் பதில் தந்ததும் அவனை முறைத்து , தண்டனை எழுதி தீர்ப்பு கொடுத்து ஜெயிலரை கூப்பிட்டு காதில் ஏதோ சொல்ல, அவரும் தலையசைத்து வணக்கம் போட்டு சென்றார். 


நீதிபதி ஜெயிலர் காதில் என்ன சொல்லியிருப்பார் என்பதை ஜெயிலர் கொடுத்த தண்டனை மூலம் யூகித்தான் திருடன். மற்ற திருடர்களை விட இவனுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டது. இருந்தாலும் அவன் உழைப்பிற்கான சம்பளம் வழங்கப்பட்டது . 


பிறகென்ன தண்டனை முடிந்து விடுதலையாகும் போது மீண்டும் ஜெயிலரின் ஆலோசனை இலவசமாக வந்தது. தலையசைத்து வெளியே வந்தான். சினிமா படத்தில் வருவது போல புதுக் கனவுகளோடும் புது மனிதனாகவும் வரவில்லை. உழைத்து சேர்த்த பணத்தில் சிறிது நாள் காலம் ஓட்டினான். மீண்டும் அவன் தொழிலை கையிலெடுக்க மீண்டும் நீதிபதி முன் ஆஜரானான். அவன் நேரத்திற்கு அதே நீதிபதி வர, இவனைப் பார்த்ததும் நீதிபதி நெற்றியை சுருக்கினார். 


"ஏம்பா! இப்ப தானே போன, அதுக்குள்ள வந்திட்டியே? போன முறை நீ வந்தப்ப உனக்கு நிறைய வேலை கொடுத்து உழைப்பாளியா மாத்திட்டு அனுப்பினா நீ திருந்தி உழைப்பேன்னு நினைச்சு தண்டனையை மற்றவர்களை விட உனக்கு கடுமையாக்க சொன்னேன். நீயும் திருந்தி உழைத்து வாழலாம் இல்ல?" என்று கேட்க, 

"ஐயா! வணக்கம். நானும் அப்படித்தான் நினைச்சி போனேன். ஒரு வேலையில் சேர்ந்தேன். நல்லா உழைத்தேன். ஆனா பாருங்க, சர்க்கார் கொடுத்த சம்பளத்தை விட கம்மியா கொடுத்தார். பார்த்தேன் பேசாம ஜெயிலுக்கு போயிடுவோம். சம்பளமாவது கூட கிடைக்குதுன்னு மறுபடியும் திருடினேன். மாட்டிக்கிட்டேன். இங்கே வந்திட்டேன்" என்றான் அனாயசமாக . 


மேலும் " காசு கரைந்ததும் எண்ணம் மாறிடுது. தெரியாத தொழிலை செய்கிறத விட தெரிஞ்ச தொழிலை செய்து ஜெயிலுக்கு வந்து சம்பாதிக்கலாம் ன்னு வந்தேன் ஐயா! அதுவும் இப்ப முன்பு மாதிரி யாரும் வீட்டிலையோ பர்ஸ்லையோ நிறைய பணம் , காசு வைப்பதில்லை ஐயா, எல்லாம் ஏ .டி .எம். கார்டு தான் யூஸ் பண்றாங்க. நகையெல்லாம் தேவைப்படும் போது பேங்க்குல இருந்து எடுத்து போட்டுக்குறாங்க. மறுபடியும் லாக்கர்ல வைக்கிறாங்க. வீட்டில வெறும் கவரிங் நகை தான் இருக்கு ஐயா, " என்றான் தன் துக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணம். 


இதைக்கேட்ட நீதிபதிக்கு ஒரு நொடி தலை சுற்ற, பக்கத்திலிருந்த தண்ணீரை குடித்தார். 

என்ன? என்பது போல் திருடனை பார்க்க, அவனும் 


" நான் திருந்தி என்ன சார் ஆகப்போகுது? நாட்ல இருக்குற பணக்காரங்க எல்லாம் என்னை மாதிரி ஏழையா இருக்கிறவங்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம். சில பேர் கடன் வாங்கி சொத்து இருந்தும் சர்க்காருக்கு வட்டி, வரி கட்டாம வெளிநாட்டுக்கு ஓடிப் போயிடறாங்க. அவங்களை கேள்வி கேட்க யாருமில்லை. அதுக்கு ஒரு தண்டனையும் சட்டம் கொடுக்கிறதில்ல. அவங்களை ஈசியா விட்டுபுட்டு... என்னை போல இருக்குறவங்க காசு இல்லாததால குடும்பத்தை காப்பாற்ற திருடறோம். எங்களுக்கு மட்டும் தண்டனை . என்ன நியாயம் இது? நீங்க தண்டனையை எங்களுக்கு மட்டும் கடுமையாக்குறீங்க, கேட்டா நாங்க திருந்தனும்ன்னு சொல்லி மழுப்புறீங்க. ஆனால் ஓடி போனவங்க ஓடி போனவங்க தான். அப்படி அவங்களை புடிச்சாலும் அவங்க சொத்தை மட்டும் வாங்கிட்டு ஈசியா தண்டனையிலிருந்து தப்பிக்க நீங்களே வழியையும் செய்து கொடுக்குறீங்க. என்ன நியாயம் ஐயா இது" என்று கேட்கவும் உண்மையிலேயே நீதிபதி அவன் கேள்வியில் ஆடிப் போனார். உண்மை அப்படியிருக்க , ஏதும் சொல்ல முடியவில்லை அவருக்கு. இருந்தாலும் அந்த திருடனுக்குரிய தண்டனையை எழுதி நீதிமன்றத்தை ஒத்தி வைத்தார்.


அவர் மனதிலும் ஏதோ சொல்லிருக்க வேண்டும் சட்டத்தையும் தண்டனையையும் எல்லோருக்கும் ஒன்றாக திருத்தி எழுதச் சொல்லி.

பொள்ளாச்சி போலாமா by Vidhya Nivash

 


ரொம்ப நாள் ஆசை பொள்ளாச்சி ,வால்பாறை பார்க்க. தீடிரென கிளம்பி பயணத்தை அதிகாலையில் தொடங்கினோம்.போகும் வழியில் அணைக்கட்டு, அருவிகள் செல்ல முடிவுச்செய்தோம்.

திண்டுக்கல்லையை தாண்டியது தான் மிச்சம் சாலையின் இருமருங்கிலும் அழகான தென்னை மரத்தோப்புகள் வரவேற்க, அழகான மலை தொடர்ச்சி கூடவே வர.அடித்த காற்றில் மொட்டை மாடியில் நின்று கூந்தலை காற்றில் பாடவிடும் பெண்ணை போல் ஒவ்வொரு தென்னையும் காட்சி தந்தது. 



ஆனைமலை மேகங்களுக்கு நடுவே இளைப்பாற, ஆழியார் அணை ஒருபுறம்,மறுபுறமாக அறிவு திருக்கோயில்,கண்டிப்பாக அந்த சூழ்நிலையில் ஒய்வெடுத்தால் அறிவு மட்டுமா! சாவியில்லாமல் மனமும் திறக்கும்.

மெல்ல ஆரம்பித்த மழைச்சாரல், ஆவலாக செல்ல விரும்பிய கவியருவி, மழை வந்து வழிமறித்தது.



கட்டுக்கடங்காத காட்டருவி பாறை வெடிக்க முழங்கி சென்றது.வழியெங்கும் காட்டருவி.

 மலை ஏற்றத்தில், மழைச்சாரல் நடைப்போட ,இசையுடன் சேர்ந்து சொர்க்கமாக தோன்றிய நேரம்.எங்கும் பச்சைப் பட்டு விரித்த தேயிலை தோட்டங்கள். ஆங்காங்கே அருவி,ஆனால் எதிலும் சிரம் கரம் புறம் நனைக்க முடியாமல் கடைசியாக மழையில் நனைந்த சுகத்துடன்,உணவு , விடுதியில் ஓய்வு.






விடாமல் பிடித்த மழை, கண்ணாடி அறையில் மாட்டிய பறவை போல் மனம்.இதற்கிடையே மகனின் உடல் ஒத்துழைக்கவில்லை.கைவசம் இருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டாச்சு.ஊசியும்,மருந்தும்,போட ஆளும் வேண்டும்.(டாக்டர் கைவசம், தொலைபேசியில் தம்பி)இரவு எட்டு மணிக்கு ஊரே அடங்கிவிட்டது.கூட்டி சென்ற ஓட்டுநரை பாவம் தூக்கத்தில் எழுப்பி.நல்ல வேளையாக விடுதிக்கு கீழே அரசு மருத்துமனை ,தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு சுத்தம்.ஒருவழியாக இரவு கழிந்தது.

தொடர் மழை,வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.காலையில் சிறு நடைபயணம்..

தொடரும்..


படமும் கருத்தும் by Veena Shankar

 


பிளவுபட்ட இதயங்கள் இங்கே ஒளடத்திற்காக காத்திருக்க

அதையும் ரசிக்க நினைக்கும் மனமே

உனக்கும் இதயம் பிளவுப்பட்டதா? 

வலியின் அருமை அனுபவிப்பவனுக்கே உண்டு

மருந்தை விட்டு ஆற்றாவிட்டாலும் 

மாயமாய் மறைந்து விடு இங்கிருந்து

பிளந்தது பிளவுப்பட்டதாகவே இருக்கட்டும்

மேலும் ஏற்படுத்த வேண்டாம் பிளவை

Thursday, September 26, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


தெறிக்கவிட்டன துளிகள் கோப்பையினின்று 

தெரியாத ஒன்று தெரிந்ததை நினைத்து

கொப்பளிக்கும் மனமும் இப்படித்தான் ஆற்றாமை கொள்ளாமல்

தெறிக்கவிடும் 

வார்த்தைகளை

Tuesday, September 24, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


மெல்ல திறந்து பார்த்தேன்

 மேகங்களின் ஊடே ஓர் நிழலா!

 நிஜமா! உடலா! ஈர் உயிர்,நான்கு

 கண்கள்,கண்விழித்த நிலையில்

 ,பாலத்தில் ஓடும் ரயில்,அதில்

 பயணிக்கும் பல்லுயிர்,

 இவற்றுக்கு இடையே ஓடும்

 நதி,சத்தமில்லாமல் ஓட அதில்

 உறங்கும் மௌனம் அதை

 எழுப்பி சென்ற ரயிலின் ஓசை,

 இதற்கிடேயே சிலையான

 ஜோடி,பேச ஒன்றுமில்லை

 ஆனாலும் இணைந்து

 இருக்கோம் என கதை ஓட்டிய

 நிலா!

படமும் கருத்தும் by Veena Shankar

 


வானத்து நீலம் மறைந்து செங்கதிர்கள்

விரிய

காதலர்களின் முகங்கள் மட்டுமல்லாது அவர்களின்

நிழலும் சிவந்ததே

இச்சைகள் இம்சைபடுத்த

அவர்கள் தன்னிலை பெற நீயும்

உன் கதிர்களை விரித்தாயோ?

இன்று அவர்களின் தவத்தை காத்த நீ

நாளையும் தொடர்வாயோ? 

அப்படி நீ நினைத்தால் நிச்சயம் ஏமாறுவாய் 

நாளை அவர்கள் இங்கே வருவதில்லை

இறப்பி்ல் சேர்வோம்

என்ற முடிவுக்கு அவர்கள்

வந்த பின்னும்

இன்று அவர்களின் இன்பத்தை தடுப்பது

நியாயமா செங்கதிரே?

Monday, September 23, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


Ramalakshmi: World's best active timekeeper,hardworker and the best one who follows queue ever

Vidhya Nivash: பள்ளிக்கு செல்லவில்லை,

பாடம் படிக்கவில்லை, செல்லப்பிள்ளை இல்லை இவை, அனுபவ பாடம் தந்த உழை, பிழைத்து வாழ் என்ற தன்னம்பிக்கை

 Veena Shankar: வெயிலுக்கான குடை இங்கே பசுமையாய்

எறும்பின் மழைக்கால உணவிற்கு துணையாய்

 Veena Shankar: கரடு முரடான பாதையில் ஓர் தேடல் உணவிற்காக

தேடலுக்காக கால்கள் அமர மறுக்க 

குடையானது ஓர் மெல்லிய இலையும்

அன்று தண்ணீரில் தத்தளித்த எறும்பிற்கு படகாய்

இன்றோ அதுவே குடையாய்

நட்பின் அடையாளமாய் காணவும் விழிகள் நிறைகிறது கண்ணீரால்

 Vidhya Nivash: இங்கே அங்கீராத்திற்கு கூட பாரபட்சம் உண்டு,

எந்த அகங்காரமும் இல்லா எளிமையான எறும்பு

 Veena Shankar: இந்த இலையை சுமப்பது எதற்கு?


வீட்டில் நுழையும் தண்ணீரை நிறுத்தவா?


வெப்பம் அதிகமானதால் அதை தணிக்க கூரை வேயவா?


பசுமையை என்றுமே மனிதனிடமிருந்து காக்ககவா?


காரணங்கள் பல மனதில் வந்த போதும் எறும்பின் 

உழைத்து பிழை என்ற எண்ணம்


அதுவும் பிழையில்லாமல்


 அடுத்தவரின் உழைப்பை திருடி

அவர்களுக்கு இழப்பை இழைக்காமல்

 Vidhya Nivash: எளிமையிலும் வலிமை,

புத்தியால் சித்திப் பெற்ற கூட்டம்,

ஒற்றுமை என்ற ஆயுதம் போதும்,

துரும்பும் எறும்பும் சேர்ந்து வெல்லும் எப்படையையும்,உடல் வலிமை என்ற வேசம் தேவையில்லை

 Vidhya Nivash: சிறுசேமிப்பு மற்றும் தகவல்தொடர்பின் குரு

 Veena Shankar: புகைப்படக் கருவியில் சிக்கியவை

இவை இரண்டு


மாய வலையில் வீழாத இவைக்கு

தண்ணீரில் கண்டம்


தன்னை தீண்டியவனை ருசிப்பதால் எறும்புக்கு கண்டம்


மனிதன் அவன் துண்டிப்பதால் இலைக்கு கண்டம்


ஆனால் அவனுக்கு எப்போது விளங்குவது 

பசுமையைத் துறந்தால் தன் கண்டத்திற்கு கண்டம் என்று

 Vidhya Nivash: தேன் போன்ற உடல்,

சீண்டினால் தரும் வலி தேள் போல கொட்டும்

Veena Shankar: கொட்டும் மழையில் புற்றை விட்டு வெளியே வாராது


கொட்டு அடித்துக் கொண்டு தன் உழைப்பை தாராது


கொட்டி கொட்டி கொடுத்தாலும் தேவைக்கு மேல் தேடாது 


கொட்டு வாங்கினாலும் மானிடன் மனநிலை என்றுமே மாறாது

Veena Shankar: இருட்டில் கொண்ட பயணம் இப்போது வெளிச்சத்திற்கு வந்தது

Saturday, September 21, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


புள்ளி கொண்ட மேகத்தின் கோலத்தை

கலைத்தது யார்?

நீ தானா!

நீலவெளியின் வெண் மேகங்கள்

மாரியை 

தருவதுற்கு முன் நீயும் வெளிப்பட்டது ஏனோ?

காற்றும் உன்னோடு சேர்ந்து மாரியை தடுத்து

எங்கள் புழுக்கத்தை 

மாற்றியதும் ஏனோ?

மாறியது நீ மட்டுமல்ல

ஒற்றை நிலவே

 நானும் தான் மாரியை வேண்டி நிற்கின்றேன்

உன் குளிரையும் கொஞ்சம் மேகத்திற்கு 

கொடுத்து குளிர்விப்பாய்

Friday, September 20, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 




 Veena: விட்டு வெளியே வந்தால்

கோட்டை கூட வசமாகும்

அதற்கு கொஞ்சம் மதியும் மறதியும் தகுதியாகும்

மறதியை வென்றால் மதியும் வெல்லும்

Vidhya: பகட்டான வாழ்க்கைக்கு நகர்த்தும் பகடைகள் இங்கே காட்சிக்காக!

 Veena Shankar: கட்டம் அமைத்து தரம் நிர்ணயமாகும் இங்கே

 தகுதி என்பது ஒரு பகுதியே

விதியும் வெல்லும் மதியால்



பல திசைகள் திரும்பி சென்றாலும் வெற்றி மட்டும் கட்டத்திற்குள்ளே

Veena Shankar: வெளியே தலை நீட்டினால் மட்டுமே

 தெரியும் அவரவர் நிலை

உள்ளே என்றால் பெட்டி

வெளியே வந்தால் கட்டம்

கூட்டமாய் வந்தாலும்

நிறமும் நிலையும் வேறு தான்

வந்த பின்னும் எவரும் கொள்ளலாம் வெற்றி அது

போர்வீரர் என்றாலும்

விளையாடும் வீரர் என்றாலும்

Akhila: King & Queen - Eagerly looked upon by rest of the world😎😍

 Akhila: Zomato deliveryக்கு பதிலா Amazon delivery😵‍💫😵அடடா வட போச்சே🥸

Vidhya Nivash: மதியை வெல்லும் காய்கள் இங்கே மதியை மயக்கும் சுவையில் இனிப்பாக போட்டியில் வென்றவருக்கு பெட்டியில் வந்த பரிசு.

 Veena Shankar: இணைப்பின் பந்தம் இனிப்பின் வடிவிலே

Veena Shankar: இந்த தீபாவளி ரிலீஸ் ஸ்வீட் ராஜா அண்ட் கோ வடிவில்😉

Akhila: குதிரை: மன்னா, மக்களிடம் போய் என்ன சொல்ல வேண்டும்?


மன்னர்: வந்துட்டோம்னு சொல்லு! திரும்ப வந்துட்டோம்னு சொல்லு!! 

ராஜா ராணி season 2 🤴 👸

 Veena Shankar: நிறங்கள் எதிரியல்ல என்றும்

விளையாட்டில் அவற்றின் நிறத்தை வேறுபடுத்தி காட்டி ஒரே பெட்டியில் அடைக்கும் முறையும் சரி தானா?

வெற்றியும் தோல்வியும் சமமே என்று உணர்ந்த மனிதன்

எப்போதும் வெற்றியை மட்டும் ருசிக்க நினைப்பது ஏன்?

Veena Shankar: ஆட்டத்தில் மட்டுமல்ல கூட்டணி இங்கே

ஆட்டம் முடிந்தாலும் தொடரும் கூட்டணி பெட்டிக்குள்ளே

படமும் கருத்தும் by Veena Shankar

 


மணவாழ்வில் பயணத்தை அலங்கரிக்க

 மணமேடை மட்டுமே ஓர் இடம், 

அதற்கு முன் தானோ இந்த அலங்கார அணிவகுப்பு

 ஜோடிகளிடையே

கரம் பிடிக்கும் முன்

 மனம் பிடித்திட ஓர் வாசல்

இங்கே

அமைத்தது புகைப்பட தொகுப்பு என்ற பெயரில்

சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்ட பின் 

கரமும் குரலும் உயராமல்

காக்க வேண்டியது அவர்கள் இருவருமே

Thursday, September 19, 2024

வலியது எது ? By Veena Shankar

 


வலியது எது?


மெய்யும் மெய்யும் சேர்வது மட்டுமே அல்ல காதல் 

மெய்யில் மெய் கொண்டு இணைவதே காதல்

சொல்லில் சொல் வைத்து சொல்வதல்ல வாழ்வு

சொல்லும் சொல்லும்படி கொள்வதே வாழ்வு

மனமும் மனமும் பிணைவது அல்ல சிறப்பு

மனமும் மணமாய் அடைக்கலமாவதே மதிப்பு

Wednesday, September 18, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


திறவுகோல் எங்கே உன் விழியிலா?

 அன்பு எனும் விதையில் விருட்சமாய் ஓங்கி

வளர்ந்து நான் நிற்க 

விதையிட்டவனே உறவிகளிலிருந்து விலகி இருக்க சொல்ல 

நானும் முயல்கிறேன்

மனசாட்சிக்கு எதிராக

ஓரளவு வெற்றி கொண்டாலும் உனையும் 

மறக்க வழி தேடுகிறேன்

முயன்றும் முடியவில்லை

உன் அடி தொடுவதன்றி

கண் திறந்தால் என் செயலால் நீயும் அன்பு கொள்வாயோ?

திறவுகோல் என்னிடமில்லை அது என்றும் உன்னிடமே!

விழி மூடியிருந்தாலும் இதழின் அதே அழகு விழியில் ரம்மியமாய்

என் விழி திறந்து காட்சியை பார்த்த போதும் 

என் விழியும் உன் உதடு போல் 

புன்னகைக்க மறுத்ததே 

உன் உறுப்புகள் இடம் மாறி வனப்பு தந்தாலும்

என் விழி அதை ரசித்து உன்னிடம் அடிமையாக்குகிறதே

Tuesday, September 17, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


சொல்லால் சுட்டெரித்த என் காதலியை விட

மெய்யால் சுட்டெரிக்கும் உன் கதிர்கள் மேல்

ஏதோ ஓர் வெளிச்சம் என் முன்னே

என் அறியாமையால் உனை ரசிக்க மறந்தேன் இப்போது

காலையில் உன் அழகை கண்ட பின் இன்னும் அதனின்று மீளாதவலாய்


 ஆரம்பத்தில் வெளிச்சம் அமைதியாய்

நீயும் உயர செல்ல செல்ல

மறந்தாயே மக்களையும் மாக்களின் நிலையையும்

உன் தாகம் தணிய கொஞ்சம் நீர் கொண்ட பின் 

எங்கள் தாகம் தீர்க்க

மேகத்தை துணை கொண்டனையே!

உன் சுட்டெரித்த கதிர்களும்

மன்னிப்பு கேட்டன மாலையில்

நிலவின் வருகையால்

செய்த உதவி மறந்ததை போல்

நீயும் மறந்தனையோ?

உன் கதிர்களை இதமாய் பதமாய் இருக்க சொன்னால் தான் என்ன?

Monday, September 16, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



 சிறகின் ஊடே சிகரம் தொட்ட பறவைகள்

வானத்தில் தேடுவது தான் என்ன?

காட்சிகள் யாவும்

கருமையில் வெண்மையாய் தெரிவதும்

வெண்மையில் கருமையாய் மாறுவதும் ஏன்?

நிறம் மாறும் பூக்கள் 

இருக்க

அந்த வித்தை தெரியாமல் 

காற்றின் மோகத்தால்

மேகத்தின் இடையே

வலம் வரும் பறவைகள் ஓர் அழகே!

பூமியில் பறக்க வேண்டுமானால் உடல் மட்டுமல்ல

மனமும் இலகுவானால்

சிறகு இல்லாமற் பறக்கவும் முடியுமே!

வான் வெளியில் உள்ள சுத்தம்

பூமியில் இல்லையென்று சத்தமாய் சொன்னாலும் மனித

மனமும் தேடுவது

அமைதியை தான்

அதுவும் ஆர்ப்பரித்து கொண்டே அடைய நினைப்பதால்

Saturday, September 14, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 கருங்கூந்தல் விரித்து

செங்குருதியில் நினைத்து

நிற்பதும் எதற்கோ?

வெண்கரங்கள் பற்றிக்கொள்ளும் என்பதாலா?

வரவையும் எதிர்நோக்கி

 வருகையையும் பதிவது நியாயம் தானா?

பெண்ணிற்கு பேதை என்ற பெயரும் சரிதானா?


 உதிரத்தை உதிர்த்து பிறப்பு கொடுக்கும் 

பெண்ணே!

உன் மீதமிருக்கும் உதிரத்தை எடுக்கும்

கயவர்கள் இருந்தாலும்

உன்னை தாங்கும் கரங்களும் உண்டே!

உன் முகம் மறைத்து 

நீ கொண்டாடும் வெற்றியையும்

நீ கொள்ளும் வேதனையையும் 

பகிர ஆளில்லாமல் 

நீ தவித்தாலும்

உன் வாழ்வில் தவிர்க்க முடியாதவனும் ஓர் ஆணே!

அவன் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கொள்வான் உன்னை எப்போதும்

உன் உயிருள்ள வரை


 முகம் தெரியா மனிதரை 

 தாங்கிய கரங்கள், தங்கள் 

முகவரியை தொலைத்த கதையும்

உண்டு இங்கே

முகமூடி கூட செல்வத்தை மட்டுமே

பறிக்கும்

இந்த முகம் மறைக்கும் வித்தை மனிதனையே சிதைக்கும்

Wednesday, September 11, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 நகைப்பின் கோணம் பலவகை ஆகும் போது

நகைப்பவரை கண்டு அச்சம் கொள்ளாமல்

தான் நினைத்ததை முடிக்கும் எண்ணம் 

இருக்கும் வரையில்

எல்லா நாட்களும் இனியவையே


 பரிகாசங்கள் கூட பரிதாபமாகும் சில சமயம்

ஆனால் அதுவே எட்டாக்கனியையும் பறிக்க தூண்டும் பல சமயம்


 பின்னால் நின்று நகைப்பவர் யாரும்

முன்னால் வருவதில்லை

எக்காரணத்திற்காகவும்

கருவியும் அவரே நம்மை ஊக்கப்படுத்த

அறுவி விட வேண்டாம் அவரை

நம் வாழ்வில்

தானாய் இடம் மாறுவர்

வடிவம் தருவர்

நம் வெற்றிக் கண்டு

அப்போதும் திருந்தாமல் அடுத்தவரை பரிகாசம் செய்வர்

உன்னை சொல்லும் போது அவர்களை பக்கமாகவும்

அடுத்தவரை சொல்லும் போது தூரமாக நிறுத்தி விடு அப்படிப்பட்ட மனிதர்களை

நீ மென்மேலும் உயர

Monday, September 9, 2024

பாதை மாறிய பயணம் by Veena Shankar

 


பாதை மாறிய பயணம்


ஒரு ஆண் மற்றும் பெண் எறும்புகள் ஜோடியாக தன் கூட்டத்தோடு வாழ்ந்து வந்தன. ஒற்றுமைக்கும் சுறுசுறுப்புக்கும் பெயர் போனது எறும்புகள் என்பது நமக்கு தெரியும். அப்படி இருந்த எறும்புகளின் இடையே யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. அந்த ஜோடி எறும்பில் மனைவி எறும்பு, தன் கணவன் எறும்பிடம் தனக்கு கூட்டத்தினரோடு இருக்க விருப்பம் இல்லையென்றும் வேலை பளு காரணமாக தன் கணவன் குழந்தைகளோடு தனித்து வாழ ஆசைப்படுவதாக சொன்னது. முதலில் ஆண் எறும்புக்கு இதில் விருப்பம் இல்லையென்றாலும் அடி மேல் அடி வைக்க அம்மியும் நகரும் தானே? 


சில நாட்களில் ஆண் எறும்பு தன் மனைவியின் பேச்சை கேட்டு தன் கூட்டத்தினரிடம் காரணம் இல்லாமல் சண்டையிட்டது. மேலும் தான் தன் குடும்பத்துடன் தனித்து வாழ விரும்புவதாகவும் அதனால் கூட்டத்தை விட்டு விலகிவிட முடிவு செய்வதாகவும் சொன்னது. இதைக் கேட்ட மற்ற எறும்புகள் தங்களுக்கு இதில் விருப்பமில்லையென்றும் ஒற்றுமைக்கு நாம் தான் மனிதனுக்கு உதாரணமாக இருக்கிறோம். அதனால் நீ எங்களை விட்டு பிரியக்கூடாது என்றும் சொல்லியது. அப்படியென்றால் நான் கூட்டத்துக்கு தலைவனாக மட்டுமே இருப்பேன் சரியா எனக் கேட்கவும், தன்னை பிற எறும்புகள் தலைவனாக ஏற்றுக் கொள்ளாது என்று நினைத்தே கேட்டது ஆண் எறும்பு. ஆனால் மற்ற எறும்புகள் தங்களுக்குள் பேசிக் அந்த எறும்பையே தலைவனாக ஏற்று கொள்ள முடிவு செய்தது. தலைவன் என்ற தலைகனத்தால் அந்த எறும்பு வலம் வர , தன் புருஷன் இப்போது தான் சரியான முடிவை எடுத்திருக்கிறான் என மனைவி எறும்பும் நினைத்தது.


 தனக்கு கிடைக்கும் எந்த உணவு பொருளானாலும் தான் தான் முதலில் எடுத்துக் கொள்வதாகவும் தன் மனைவி பிள்ளைகள் உண்டது போக மிச்சம் தான் மற்ற எறும்புகள் சாப்பிட வேண்டும் என கட்டளையிட்டது புதிய எறும்புகளின் தலைவன் . அதற்கும் மற்ற எறும்புகளும் ஒத்துப் போக அவைகளுக்குள் புதிய தலைவனால் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும் அதை பெரிதுபடுத்தவில்லை. 


நாளடைவில் இந்த தலைவன் எறும்பு தன் மனைவி பிள்ளைகளுக்காக நிறைய உணவுகளை பதுக்கி வைக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் தன் நிம்மதி, தூக்கம் எல்லாவற்றையும் துறந்து முழு நேரமாக ஓய்வில்லாமல் உழைத்தது. மற்ற எறும்புகளை அடிமை படுத்தி தன் வேலைகளை சாதித்துக் கொண்டது தலைவன் எறும்பு. மேலும் புற்றுக்குள் வருவதையும் தவிர்த்து வந்தது. இது மனைவி எறும்புக்கு வேதனை தந்தாலும் தன் கணவன் தான் தலைவன் என்றும் தன் குடும்பத்திற்கு தான் முதல் மரியாதை இருக்கிறதே என்ற ஆனந்தத்தில் திளைத்தது. மேலும் என்றும் தங்களுக்கு உணவு பஞ்சம் இருக்காது என்று நினைத்துக் கொண்டு அப்படியே தன் கணவன் போக்கிற்கு விட்டு விட்டது. 

 

நாட்கள் மெல்ல நகர கோடை முடிந்து மழை காலம் தொடங்கியது. எறும்பு கூட்டங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருப்பு உணவை பகிர்ந்து உண்டு புற்றில் தஞ்சமடைந்தன. இதற்கிடையே விடாது மழை பொழிய வெளியே இருந்த தலைவன் எறும்பு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால் அதன் உழைப்பின் பலனாக எப்படியோ ஒரு சருகை பற்றி மெல்ல கூட்டிற்குள் முடங்க எத்தனித்தது. ஆனால் தன் பெருத்த உடலின் காரணமாய் அது உள்ளே போக முடியாமற் போனது. 


மற்ற எறும்புகள் தாங்களும் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்படுவோம் என்ற அச்சத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பக்கத்திலிருந்த ஒரு மரத்தின் பொந்தினுள் அடைக்கலமாகியது. 


தலைவனும் அவன் குடும்பமும் உண்டது போக மிச்ச உணவை மற்ற எறும்புகள் பகிர்ந்து கொண்டதால் வடிவில் சிறுத்து போயிருந்தன. அதே நேரத்தில் அளவுக்கு மீறி சாப்பிட்ட தலைவன் எறும்பின் குடும்பம் பெருத்து போய் இருந்ததால் புற்றிற்குள் இருந்து பாதி தூரத்திற்கு மேல் அவைகளால் வெளியே வர முடியவில்லை. மற்ற எறும்புகள் உதவ முன் வந்தாலும் அது வெற்றியடையவில்லை. குடும்பத்தை காப்பாற்ற முடியாமற் தலைவன் எறும்பு தவித்தது.  


எறும்புக் கூட்டம் எதிர்பார்த்தது போலவே அன்று பெய்த பேய் மழையில் எறும்பு புற்று கரைய ஆரம்பித்தது. எறும்பு தலைவனின் குடும்பம் மட்டும் விதியின் காரணமாய் வெள்ளத்தில் மூழ்கி அடித்து செல்லப்பட்டது. குடும்பத்தை இழந்த தலைவன் எறும்பு வேறு வழி தெரியாமல் தான் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள மற்ற எறும்புகள் தஞ்சமடைந்த மரத்தை நோக்கி சென்றது.


மற்ற எறும்புகளின் வேதனையில் சாதனை கொண்ட எறும்பு தத்தளித்தது


பாதை ஒன்றாய் இருந்து பயணம் வேறானால் சிக்கலே

Sunday, September 8, 2024

இழப்பு எதனால் by Veena Shankar

 


இழப்பு எதனால்?


மறுத்து பேசிவதாலா?


மருந்து போல் அளவாய் சொல்வதாலா?


எதிர்ப்பார்ப்பு கொள்வதாலா?


எதிர்வாதம் செய்வதாலா?


காலம் பதிலளிக்காததாலா?


காலன் வெற்றி பெறுவதாலா?


பொறுமை ஓய்ந்து போவதாலா?


பொறாமை குடி கொள்வதாலா?


தேடுதல் இல்லாததாலா?


தேக்கம் இருப்பதாலா?


தீர்ககாமாய் இல்லாததாலா?


தீவினை என்பதாலா?


அறிவியலின் மாற்றத்தாலா?


அறிவின் தொகுப்பாலா?


வறுமையின் பிடியினாலா?


வாய்ப்பின் நிராகரிப்பாலா?


எது. உண்மை? 

எது மாயை?


அறிய முடியாமற் தவிக்கிறேன்

இழப்பை தடுக்கவும் நினைக்கிறேன்

Friday, September 6, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


தெரிந்தவை யாவும் கையில் அடக்கமாய்

தெரியாதவை யாவும் மண்ணில் பொக்கிஷமாய்


ஆளத் தெரிந்தால் மட்டுமே பலன் உண்டு பொக்கிஷத்திற்கு

ஆளத் தெரியாவிட்டாலும் உண்டு அழகு படிப்பதில்


பல வடிவங்கள் உண்டு இன்று அறிவை ஆள

அதையும் ஆள, வேண்டும் புத்தகம் என்ற ஒன்று


விரைவில் வசமாகும் எதுவும் இந்நாளில்

ஆனால் புத்தகம் மட்டுமே என்றும்

வசமாகும் நம்மிடம்

Thursday, September 5, 2024

கடிதம் by Veena Shankar

 


கடிதம் ஒன்றே போதுமே

நம் துயர் துடைக்க!

எதிரே யார் இல்லாதபோதும்

இருவருக்குமான பகிர்மானம் அரங்கேறும் இவன் மூலம் 

பல சமயம் ஆவலாய்

சில சமயம் ஆறுதலாய்

பல சமயம் அலங்காரமாய்

சில சமயம் அவசரமாய்

பல சமயம் காதலாய் 

சில சமயம் வெறுப்பாய்

பல சமயம் அமைதியாய்

சில சமயம் ஆதங்கமாய்

பல சமயம் சினேகமாய் 

சில சமயம் வெறுமையாய்

பல சமையம் அருவியாய் 

சில சமயம் அழுகையாய் 

பல சமயம் துடிப்பாய் 

சில சமயம் ஆதங்கமாய் 

எவர் இலர் இவனை கையாளாமல் அக்காலத்தில்

பண்டிகைக்கு பலவாறாய் பிரசவிப்பான்

பிரசாரமாவான்

பிரபலமாவான்

பிரகாசமாவான்

நம் முன்னே

தேவையுள்ள போது 

துணையானான் 

இன்றோ ஏனோ அந்நியமானான் 

பழைய கதை மீண்டும் அரங்கேறுவது போல்

மீண்டு வந்து உயிர்த்தெழுவான்

எதிர்காலத்திலும்

Wednesday, September 4, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


Akhila: ஆனைக்கு நம்பிக்கை படகோட்டியிடம்


அலனுக்கோ பயம கலந்த நம்பிக்கை- 

ஆனை ஆடவும், ஓடவும் கூடாதென!


 Vidhya Nivash: இரு வேறு நிலை, ஒன்று அலங்கரிக்க பட்டு மேளதாளத்துடன் கோவிலில்... 

மற்றொன்று அலங்காரமின்றி மிருகக்காட்சி சாலையில்..

பொதுவில் இரண்டும் காட்சிப் பொருள்!

ஒன்று நிச்சயிக்கப்பட்ட திருமணம்,

மற்றொன்று காதல் திருமணம்,

மொத்தத்தில் நம்பிக்கை செல்வோர் இரண்டும் மகிழ்ச்சி தேடி ஆனால் செல்வோருக்கு தெரியாது மகிழ்விக்க என்று.


Veena Shankar: பாரம் தூக்க ஓர் நீர்வழிப் பயணம் இங்கே

அதற்கு யானையை தாங்கும் படகும் இங்கே

படகையும் தாங்கும் நீரும் இங்கே

இதில் பாரம் யாருக்கு அதிகம் என்ற

கேள்வியை மனதால் கொண்டாலும்

என் மனம் சொல்கிறது

இம்மூன்றையும் திறன் கொண்டு 

கையாளும் படகோட்டியிடமே!


 Veena Shankar: தும்பிக்கை உள்ளவனின் நம்பிக்கை பயணம்

புத்துணர்வுக்காகவா?

துணையை புரிந்து கொள்வதற்காகவா?

நாட்டு மக்களை உற்சாகப்படுத்தவா?

தன் நடையின் நளினத்தை

தரையில் காட்டவா?

பாட்டாடை உடுத்தி அரசரை சுமக்கவா?

தேரில் பவனி வரும் கடவுளை அலங்கரிக்கவா?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளையை கம்பீரமாகக் காட்டவா?

மறைத்து வைத்த திறமையை திருவிழாவில் வெளிப்படுத்தவா?

அலங்கரித்து தன்னை அழகாய் காட்சிப்படுத்தவா?

தன்னை தானே வெறுமையாய் உணர்ந்தாலும் திறமையுள்ளவன் இவன்

அவன் பயணத்தின் பலன் கிடைக்க

அவன் பலத்தை அவனுக்கு உணர்த்தாமல் ரசிப்போம்

அவன் இருக்கும் இடத்திலே

Tuesday, September 3, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 மேலாண்மை கொண்டவனின் உணர்வு இங்கே சித்திரமாய்

நிஜமும் இப்படித்தான்

சற்றே சிரம் தாழ்ந்தால் கூட

வரமாய் போகும் அழுத்தம் தருவோருக்கு

கரம் நிறைய சிரம் தாழ

அவன் தன் கால்கள்

அடுத்தவனின் சிரத்தை அழுத்த

காணும் காட்சி யாவும் பரிதாபம்

மேலிருப்போனின் எண்ணம் ஈடேறும் வரை

அனைவரும் சமம் என்ற

நோக்கம் மனதில் கொள்ளும் வரை


 எவன் பாரம் எவன் கையில்?

தாங்கி பிடிக்கும் மனம் உள்ளவரை

பாரம் பெரிதல்ல

எவனும் ஒடுக்கப்படும் போது

உயிர்த்தெழவில்லை 

என்றால் அற்ப பூச்சியாகி விடுவான்

மற்றவர் பார்வைக்கு

படமும் கருத்தும் by Kiruthika

 


விதி..

தந்த கரமோ...?

அல்லது -

தாமே -

பிடித்தம் கொண்டு..

பிடித்த கரமோ...?...


எதுவானாலும்..

பிடித்தது முதல்..

'பிடித்தம் '..

தவறாது -

இருகப்பற்றவே...

இணைந்த வரிகள்

பாடும் -

இசைந்த இதயங்களை

கருவாக்கி...!...


இதயத்தின் 

மெய்யான மொழி ..

மௌனம் !...

மொழிப் பெயர்க்கபடும்...

ஒரே அலைவரிசை கொண்ட 

மனதால் மட்டும் ...!!!..

Monday, September 2, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


ஆணின் கை வரிகளுக்குள் பெண்ணின் மன வரிகள்

அது வரிகள் மட்டுமல்ல 

இருவரின் செயல் வடிவங்கள்

தாங்கும் கரங்கள் இருந்தால் தாரமும்

அடைக்கலமாவாள் கணவனின் கரங்களின் வரிகளிக்கிடையே

பிரிந்த ரேகைகள் இணையும் கோடுகளே! 

ஓர் சந்திப்பில்

அது கண்களுக்கு

புலப்படுமா காண்கையில்? 

அதுவும் தேவையில்லை என்கிறது மன மொழி அதுவும் சில வேளையில் மௌன மொழியே!

கோடுகளின் ஆழம் சொல்லும் தாங்கியதால்

கொண்ட வலிகளை

அவளும் அமர்ந்தாளோ இணைந்த கோடுகளின் மத்தியில்

தன்னை தாங்குபவனின் வலியை உணர்ந்தே!

தாங்குவது கூட எளிதே பிறர் வார்த்தையால் தாக்கப்படும் போது

புரிந்து கொள்வோம் துணையின் வலியை

கையின் கோடுகள் அழுந்தாமலும் அழியாமலும்

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...