புள்ளி கொண்ட மேகத்தின் கோலத்தை
கலைத்தது யார்?
நீ தானா!
நீலவெளியின் வெண் மேகங்கள்
மாரியை
தருவதுற்கு முன் நீயும் வெளிப்பட்டது ஏனோ?
காற்றும் உன்னோடு சேர்ந்து மாரியை தடுத்து
எங்கள் புழுக்கத்தை
மாற்றியதும் ஏனோ?
மாறியது நீ மட்டுமல்ல
ஒற்றை நிலவே
நானும் தான் மாரியை வேண்டி நிற்கின்றேன்
உன் குளிரையும் கொஞ்சம் மேகத்திற்கு
கொடுத்து குளிர்விப்பாய்

No comments:
Post a Comment