இழப்பு எதனால்?
மறுத்து பேசிவதாலா?
மருந்து போல் அளவாய் சொல்வதாலா?
எதிர்ப்பார்ப்பு கொள்வதாலா?
எதிர்வாதம் செய்வதாலா?
காலம் பதிலளிக்காததாலா?
காலன் வெற்றி பெறுவதாலா?
பொறுமை ஓய்ந்து போவதாலா?
பொறாமை குடி கொள்வதாலா?
தேடுதல் இல்லாததாலா?
தேக்கம் இருப்பதாலா?
தீர்ககாமாய் இல்லாததாலா?
தீவினை என்பதாலா?
அறிவியலின் மாற்றத்தாலா?
அறிவின் தொகுப்பாலா?
வறுமையின் பிடியினாலா?
வாய்ப்பின் நிராகரிப்பாலா?
எது. உண்மை?
எது மாயை?
அறிய முடியாமற் தவிக்கிறேன்
இழப்பை தடுக்கவும் நினைக்கிறேன்

No comments:
Post a Comment