Tuesday, September 3, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 மேலாண்மை கொண்டவனின் உணர்வு இங்கே சித்திரமாய்

நிஜமும் இப்படித்தான்

சற்றே சிரம் தாழ்ந்தால் கூட

வரமாய் போகும் அழுத்தம் தருவோருக்கு

கரம் நிறைய சிரம் தாழ

அவன் தன் கால்கள்

அடுத்தவனின் சிரத்தை அழுத்த

காணும் காட்சி யாவும் பரிதாபம்

மேலிருப்போனின் எண்ணம் ஈடேறும் வரை

அனைவரும் சமம் என்ற

நோக்கம் மனதில் கொள்ளும் வரை


 எவன் பாரம் எவன் கையில்?

தாங்கி பிடிக்கும் மனம் உள்ளவரை

பாரம் பெரிதல்ல

எவனும் ஒடுக்கப்படும் போது

உயிர்த்தெழவில்லை 

என்றால் அற்ப பூச்சியாகி விடுவான்

மற்றவர் பார்வைக்கு

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...