மேலாண்மை கொண்டவனின் உணர்வு இங்கே சித்திரமாய்
நிஜமும் இப்படித்தான்
சற்றே சிரம் தாழ்ந்தால் கூட
வரமாய் போகும் அழுத்தம் தருவோருக்கு
கரம் நிறைய சிரம் தாழ
அவன் தன் கால்கள்
அடுத்தவனின் சிரத்தை அழுத்த
காணும் காட்சி யாவும் பரிதாபம்
மேலிருப்போனின் எண்ணம் ஈடேறும் வரை
அனைவரும் சமம் என்ற
நோக்கம் மனதில் கொள்ளும் வரை
எவன் பாரம் எவன் கையில்?
தாங்கி பிடிக்கும் மனம் உள்ளவரை
பாரம் பெரிதல்ல
எவனும் ஒடுக்கப்படும் போது
உயிர்த்தெழவில்லை
என்றால் அற்ப பூச்சியாகி விடுவான்
மற்றவர் பார்வைக்கு

No comments:
Post a Comment