வானத்து நீலம் மறைந்து செங்கதிர்கள்
விரிய
காதலர்களின் முகங்கள் மட்டுமல்லாது அவர்களின்
நிழலும் சிவந்ததே
இச்சைகள் இம்சைபடுத்த
அவர்கள் தன்னிலை பெற நீயும்
உன் கதிர்களை விரித்தாயோ?
இன்று அவர்களின் தவத்தை காத்த நீ
நாளையும் தொடர்வாயோ?
அப்படி நீ நினைத்தால் நிச்சயம் ஏமாறுவாய்
நாளை அவர்கள் இங்கே வருவதில்லை
இறப்பி்ல் சேர்வோம்
என்ற முடிவுக்கு அவர்கள்
வந்த பின்னும்
இன்று அவர்களின் இன்பத்தை தடுப்பது
நியாயமா செங்கதிரே?

No comments:
Post a Comment