Tuesday, September 24, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


வானத்து நீலம் மறைந்து செங்கதிர்கள்

விரிய

காதலர்களின் முகங்கள் மட்டுமல்லாது அவர்களின்

நிழலும் சிவந்ததே

இச்சைகள் இம்சைபடுத்த

அவர்கள் தன்னிலை பெற நீயும்

உன் கதிர்களை விரித்தாயோ?

இன்று அவர்களின் தவத்தை காத்த நீ

நாளையும் தொடர்வாயோ? 

அப்படி நீ நினைத்தால் நிச்சயம் ஏமாறுவாய் 

நாளை அவர்கள் இங்கே வருவதில்லை

இறப்பி்ல் சேர்வோம்

என்ற முடிவுக்கு அவர்கள்

வந்த பின்னும்

இன்று அவர்களின் இன்பத்தை தடுப்பது

நியாயமா செங்கதிரே?

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...