நகைப்பின் கோணம் பலவகை ஆகும் போது
நகைப்பவரை கண்டு அச்சம் கொள்ளாமல்
தான் நினைத்ததை முடிக்கும் எண்ணம்
இருக்கும் வரையில்
எல்லா நாட்களும் இனியவையே
பரிகாசங்கள் கூட பரிதாபமாகும் சில சமயம்
ஆனால் அதுவே எட்டாக்கனியையும் பறிக்க தூண்டும் பல சமயம்
பின்னால் நின்று நகைப்பவர் யாரும்
முன்னால் வருவதில்லை
எக்காரணத்திற்காகவும்
கருவியும் அவரே நம்மை ஊக்கப்படுத்த
அறுவி விட வேண்டாம் அவரை
நம் வாழ்வில்
தானாய் இடம் மாறுவர்
வடிவம் தருவர்
நம் வெற்றிக் கண்டு
அப்போதும் திருந்தாமல் அடுத்தவரை பரிகாசம் செய்வர்
உன்னை சொல்லும் போது அவர்களை பக்கமாகவும்
அடுத்தவரை சொல்லும் போது தூரமாக நிறுத்தி விடு அப்படிப்பட்ட மனிதர்களை
நீ மென்மேலும் உயர

No comments:
Post a Comment