சொல்லால் சுட்டெரித்த என் காதலியை விட
மெய்யால் சுட்டெரிக்கும் உன் கதிர்கள் மேல்
ஏதோ ஓர் வெளிச்சம் என் முன்னே
என் அறியாமையால் உனை ரசிக்க மறந்தேன் இப்போது
காலையில் உன் அழகை கண்ட பின் இன்னும் அதனின்று மீளாதவலாய்
ஆரம்பத்தில் வெளிச்சம் அமைதியாய்
நீயும் உயர செல்ல செல்ல
மறந்தாயே மக்களையும் மாக்களின் நிலையையும்
உன் தாகம் தணிய கொஞ்சம் நீர் கொண்ட பின்
எங்கள் தாகம் தீர்க்க
மேகத்தை துணை கொண்டனையே!
உன் சுட்டெரித்த கதிர்களும்
மன்னிப்பு கேட்டன மாலையில்
நிலவின் வருகையால்
செய்த உதவி மறந்ததை போல்
நீயும் மறந்தனையோ?
உன் கதிர்களை இதமாய் பதமாய் இருக்க சொன்னால் தான் என்ன?

No comments:
Post a Comment