நேர்மை
ஆண்கள் அணியும் 'மை'.
நேரம்
சிலருக்கு பத்தாது;
சிலருக்கு போகாது!
மழை
வரமாக கொட்டும்;
வராட்டி வாட்டும்!
கைபேசி
அலையும் தொலைபேசி
பேசி பேசி
நேரம் போச்சு!
மண்ணாங்கட்டி
மண்ணால் கோட்டை கட்டி
மாளிகை என்றான் - மண்ணாங்கட்டி!
பணம்
எண் அச்சிடப்பட்ட தாள்;
என்னை அச்சப்பட வைத்த தாள்;
உன்னை அதிகம் நேசித்ததால்-
அமைதி இழந்தேன் காலத்தால்!
பாட்டு
சோகமும் சுவைக்கும்;
இன்பமும் இனிக்கும்;
குத்தும் குதூகலிக்கும்;
கூத்தும் குளிரவைக்கும்!
பிழை (இரு யானைகளின் உரையாடல்)
நாம் இடம் கொடுத்தது பிழை தான் - மனிதர்க்கு
நாம் இடம் கொடுத்தது பிழை தான்!
இன்று,
நாம் உண்ண தழை கூட மிஞ்சவில்லை!
நம் பிழையால் தழை கூட மிஞ்சவில்லை!!
- Few drops from Akhiladevi Kumaran

அருமை அருமை ❤️
ReplyDeleteஅழகான வரிகள் 😊
ReplyDeleteமிக அருமை
ReplyDelete