*சோதனையை தகர்க்கும் சாதனை*
விதைகள் மரமாய் எழுகின்றது
நெருப்பில் சுட்டாலும்
தங்கம்
சுடராய் ஒளிர்கிறது
வெட்டி சிதைத்தாலும்
சந்தனம்
இதமாய் மணக்கிறது
சோதனை வந்தால்
மனிதன் மட்டும்
ஏன் சோர்ந்து போகவேண்டும்
ஓ...மானிடமே
எழுந்து நிற்போம்
எதிர்த்து செல்வோம்
விழுந்து பார்த்த
விதியை எதிர்த்துப்
பார்த்து
நம்பிக்கைக் கொண்டு
வெல்வோம்
வெற்றி மகுடம் சூடுவோம்
நம் வாழ்க்கை நம் கையில்!!!!

அருமை! 👏
ReplyDeleteநன்றி சௌ😊😊
Deleteஅருமை ஜெயா👍👍👍
ReplyDeleteநன்றி 😊😊
DeleteSemma 👏👏👏
ReplyDeleteநல்லா இருக்கு jaya
ReplyDelete👌👌👌👌👌👌
ReplyDeleteஅற்புதம்
ReplyDeleteஅழகான வரிகள் ஜெயா😊
ReplyDelete