Monday, September 14, 2020

உன்னுடைய வார்த்தைகள் by Jaya

                       உன்னுடைய வார்த்தைகள்             

                                                       _ஜெயா




பலரின் பிணக்குகளின் 

காரணி தேடினால் முதன்மை

பெறுவது அவர்கள் பயன்படுத்தும் 

வார்த்தைகளே ஆகும் 


ஒருவர் வாயிலிருந்து

வெளிப்படும் வார்த்தைகள் வெளிப்பட்டவுடன்

காற்றிலே கரைந்து போகும் 

வெறும்

வார்த்தைகளே....ஓசைகளே

 

உறவில் இனிப்பையோ/கசப்பையோ உண்டாக்குவதில்

முக்கிய பங்கு வகிப்பது

நாம் உதிர்க்கும் சொற்கள். 


எனவே அடுத்தவரை 

வார்த்தைகளால்

காயப்படுத்தாமல்,

வாட்டம் போக்கும் 

வார்த்தைகளைப் பேசி

உறவினை வலுப்படுத்துவோம்

ஊட்டம் கொடுத்து 

உற்சாகப் படுத்தி

உயர்வடைவோம்...

2 comments:

  1. மிக முக்கியம் நாம் உதிர்க்கும் வார்த்தைகள்👏👏

    ReplyDelete
  2. நாவினால் சுட்ட வடு என்றும் ஆறாவது! வார்த்தைகளை உதிர்க்கும்போது அதீத கவனம் தேவை.

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...