உன்னுடைய வார்த்தைகள்
_ஜெயா
பலரின் பிணக்குகளின்
காரணி தேடினால் முதன்மை
பெறுவது அவர்கள் பயன்படுத்தும்
வார்த்தைகளே ஆகும்
ஒருவர் வாயிலிருந்து
வெளிப்படும் வார்த்தைகள் வெளிப்பட்டவுடன்
காற்றிலே கரைந்து போகும்
வெறும்
வார்த்தைகளே....ஓசைகளே
உறவில் இனிப்பையோ/கசப்பையோ உண்டாக்குவதில்
முக்கிய பங்கு வகிப்பது
நாம் உதிர்க்கும் சொற்கள்.
எனவே அடுத்தவரை
வார்த்தைகளால்
காயப்படுத்தாமல்,
வாட்டம் போக்கும்
வார்த்தைகளைப் பேசி
உறவினை வலுப்படுத்துவோம்
ஊட்டம் கொடுத்து
உற்சாகப் படுத்தி
உயர்வடைவோம்...

மிக முக்கியம் நாம் உதிர்க்கும் வார்த்தைகள்👏👏
ReplyDeleteநாவினால் சுட்ட வடு என்றும் ஆறாவது! வார்த்தைகளை உதிர்க்கும்போது அதீத கவனம் தேவை.
ReplyDelete