*உனை செதுக்கும் உளி*
_ஜெயா
வாழ்க்கையில விழும்
ஒவ்வொரு அடியும்
நம்மை நாமே செதுக்கும்
உளிகள்
உளியின் அடியினால்
உயிர் வரை வலித்தாலும்
மீண்டு எழும் சிலை
மறையாது நிற்கும் உன் நிலை
என்றும் உனக்கான உளியை
பிறர் கையில் தந்தால்
பிறரின் சிலையாய்
தான் நீ இருப்பாய்..!
உனக்கான உளியை
உன் கையில் எடுத்துவிடு
உன் உள்ளம் விரும்பும்
சிலையாய் உனை நீயே
வடித்துவிடு..!
வலியில்லா வாழ்க்கையில்லை
வழியில்லா மனிதனுமில்லை
ஓளியாய் வீசிடு
வசந்தமாய் மாறிடு!!!!

என்றும் உனக்கான உளியை உன் கையில் எடு ...அருமை👌
ReplyDeleteWonderful words.really excellent words.we are responsible for everything.valar.
ReplyDeleteரொம்ப அழகாக இருக்கிறது ஜெயா,நம்மை நாமே செதுக்கி கொள்ளுவதே மிக சிறந்த வழி!
ReplyDelete