அடையாளம் by Jaya
நள்ளிரவு தன் அடையாளத்தை
இழந்தால் தான் அதிகாலை விடியும்
விதைகள் தங்கள் அடையாளத்தை
இழந்தால் தான் செடியாக முடியும்
செடி கனிகள் தரும் மரமாக வேண்டுமானால்
செடியான தனது அடையாளத்தை
இழக்க வேண்டும்
அது போல
நம் பழைய அடையாளத்தை,
நம்மிடம் நிகழ்வில் இருப்பதை இழந்தால்தான்
புதிய அடையாளத்தை பெற முடியும்
இழந்ததை நினைத்து வருந்தாது,
இருப்பதை நினைத்து முன்னேறினால்
இலக்கை நிர்ணயித்தி
வாழ்வினை சிறப்பாக வாழலாம்!!!

அருமை ஜெயா
ReplyDeleteநமக்கான அடையாளம் நம்மில் உள்ளது,அதை புரிந்து கொள்ள வேண்டும், அருமையான பதிவு ஜெயா
ReplyDelete