காட்சியை விரித்து பார்!
பல உண்மைகள் விளங்கும்
அதன் பிம்பத்தையும் பார்!
உலக படைப்பின் அர்த்தம் புரியும்.
ஆம் வீணா,
இது பகலா? இரவா?
இல்லை மாலையா?
நடுஇரவு, விஞ்ஞானத்தின் கையில்
உலகை எந்நேரமும் படம் எடுக்க
சாத்தியமே!
எங்கும் மாயை எதிலும் மாயை அதை
விலகி பார்க்கும் கண்ணாடியில் உன்
பிம்பம் அது மட்டுமே உண்மை,அதையும்
அவர்அவர் கற்பனைக்கு ரசமேற்றி
பார்க்கும் அதிகாரம் யார்க்கொடுத்தது!

No comments:
Post a Comment