இதில் உள்ளே போடும் காசு யாவும் குட்டி போடுவதில்லை
ஆனால் நம் மனதில் போடும் குப்பைகள் யாவும் காழ்ப்புணர்ச்சியாய் வெளிப்படும்
மண் இருந்தாலும் பொன்
உடைந்தாலும் பொன்
சேமிப்பு என்னும் பழக்கத்தினால்
நீ நிறையும் முன்னே துளை
வழியே பார்ப்பதும்
நிறைந்த பின் உடைத்துப் பார்ப்பதும்
மனித இயல்பு
அங்கே நினைக்கத் தோன்றுகிறது
மனிதனின் இயலாமையை
சேமிக்கும் வரை அவசரம்
சேமிப்பு நிறைந்த பின் அசுர வேகம்
அதை செலவழிப்பதில்
மேலும் அவன் கைகளை கட்டி போடாமல் உண்டியலை பூட்டி வைத்தானே
அன்றே அவன் நம்பிக்கை கேள்விக்
குறியாகிறது
வங்கியில் இருக்கும் பணம் போல் இல்லை இது
கடன் பெற சில மணி நேரமாகும்
அவசரத்திற்காக உடைபடும் இது வட்டியும் வசூலிப்பதில்லை
வயல் காட்டு மண்ணும் சேமிக்கும் கலன் ஆனது
விதையை சேகரிக்க அல்ல
இங்கே விளைந்ததின் பலனை அனுபவிக்க
தேவையுள்ள போது உடுபடுபவன் தேங்காய் மட்டுமல்ல
இவனும் தான்

No comments:
Post a Comment