நிதர்சனம்
கைக் கடிகாரம் இல்லையென்று
சண்டையிட்டு இறுதியில் வெற்றி கண்டு அதுவும்
கிடைக்கப் பெற்றேன்.
ஆனால் என் பார்வை
என்னவோ அதை பார்க்க மறந்தது, அலைபேசியின்
வரவால், என் கைக் கடிகாரத்தின் உறவும் முடிந்தது அன்றோடு என் கரத்தில் ஆடம்பரத்திற்காகவும் அலங்காரத்திற்காகவும் பதியும் வரை மட்டுமே
உறவுகள்
அழுத்தமான வார்த்தைகள் ஆனந்தமாய் வீச அருவியாய் என் கண்களில் கண்ணீர் தேங்குவதும்
அதை மறந்து மீண்டும் உயிர்ப் பெறுவதும் யாராலே?

No comments:
Post a Comment