மெல்ல திறந்து பார்த்தேன்
மேகங்களின் ஊடே ஓர் நிழலா!
நிஜமா! உடலா! ஈர் உயிர்,நான்கு
கண்கள்,கண்விழித்த நிலையில்
,பாலத்தில் ஓடும் ரயில்,அதில்
பயணிக்கும் பல்லுயிர்,
இவற்றுக்கு இடையே ஓடும்
நதி,சத்தமில்லாமல் ஓட அதில்
உறங்கும் மௌனம் அதை
எழுப்பி சென்ற ரயிலின் ஓசை,
இதற்கிடேயே சிலையான
ஜோடி,பேச ஒன்றுமில்லை
ஆனாலும் இணைந்து
இருக்கோம் என கதை ஓட்டிய
நிலா!

அருமை வித்யா
ReplyDelete