ஆம்,நம்மவரே . அந்த ஊர் ரொட்டியை சாப்பிட்டு கொஞ்சம் வெளிறிய நிறத்துடனும், பருத்தும். குளிரில் கொஞ்சம் தொண்டை கட்டினார் போல் கரைந்தார்.
தங்கும் விடுதியிலிருந்து பார்க்கும் தொலைவில் Hyderali centre.புத்தியல் ஓவியத்தின் கட்டடம் ,புதுமையின் பிறப்பிடம்.இந்த கட்டட கலை பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.பக்கூவின் அடையாள கட்டடம்.
பக்கூவை விட்டு விடைபெறும் நேரம் .நாங்கள் பனியையும்,ஒய்வையும் தேடி சென்றதால்,நெருப்பை பார்க்க நேரம் பத்தவில்லை. இந்த நாட்டின் பெயரே fire of land.நெருப்பு கோவில்,நெருப்பு மலை,மண் எரிமலைகள், மினியேச்சர் புத்தக நூலகம் என பார்க்க வேண்டியன பல இருக்கு.
எங்களுடைய அனுபவம் அந்த நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மக்களும் ரொம்ப cool.யாருக்கும் எந்த அவசரமுமில்லை. பொதுவாக அனைத்து இடங்களும் 11am முதல் 5pm மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரத்தில் வாகன நெரிசல் அதிகம்.
கடைசியாக சொர்கமே என்றாலும் சொந்த ஊரை இல்லை வாடகை ஊரை போல வளருமா என பாடி.இட்லி, தோசை,சாம்பார், பிரியாணி சாப்பிட போகும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விமானம் ஏறினோம்.
மீண்டும் ஓர் பயணத்தில் இணைவோம்.
இதுவரை அசர்பைஜானுக்கு என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி.
Sagol Azerbaijan 🇦🇿







No comments:
Post a Comment