Monday, April 29, 2024

வட்டப்பாதை by Vidhya Nivash

 


தெளிந்த நீரோ,தேநீரோ..

புளிப்பும் ,இனிப்பும் கலக்க காத்திருக்கு..

எதை பொறுத்தாலும் பொறுக்க முடியா கோபம்,இயலாமையின் வெளிப்பாடு.

காதல் கொண்டேன் எதை கொண்டு ஈர்த்தாய்.காதலில் வரும் பொய் அன்பை ஏற்கும் மனம். கோபத்தில் மெய்யாக உதிர்க்கும் வார்த்தைகளை ஏன்? மனம் ஏற்க மறுக்கிறது.

நினைத்தது,எதிர்ப்பார்த்தது கிடைக்காமல் போகும் போது வரும் ஏமாற்றம் .நினைக்காதது கிடைக்கும் போது வரும் மகிழ்ச்சிக்கு ஈடாகுமா..

நாள்பட்ட இனிப்பு கொஞ்சம் புளித்து போக வரும் ஊடலும் சில நேரம் தேவை தானே.பேதையின் போதை தெளிய வைத்து ,தன்னிலை அறிவதும் நலமே!

 வட்டப்பாதை பயணம் ஓர் தொடர்கதை!


1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...