Wednesday, April 17, 2024

யாரோ அவன் by Vidhya Nivash

 

யாரோ அவன்,முதல் நாள் விட்டதை பார்க்க மிக்க ஆவலுடன் எழுந்தோம். அற்புதத்தை தர காத்திருந்த விடியல்.ஒரு பக்கம் சந்திரன் காட்சி தர,காலைக் கீழே வைத்தால் சரக்கியது. மெல்ல செல்ல ,ஐந்து நிமிடத்திற்கு மேல் கைகள் விறைக்க, வெப்பநிலை பூஜ்ஜியம்.
ஆஹா கொஞ்சம் கொஞ்சமாக விலகிய இருள்.செவ்வானத்தில் சின்ன உதயம்,மெல்ல வெளிவந்த இரத்த சிவப்பு கதிரவன்.வார்த்தையில் சொல்ல முடியா அழகு.அப்படி ஒரு சிவப்பு.கருவறையில் இருந்து வெளிவந்த பிள்ளைப்போல் பகலவன்.உண்மையிலேயே தினமும் அரங்கேறும் பிள்ளைப்பேறு. 






 

பனியிலும் அழகிய ஓடை ஒன்று சிந்து பாட.இயற்கை தாயின் மடியில் விளையாடும் மேகங்கள் போல் நாங்களும் போதும் போதும் என்ற அளவிற்கு,ஆடி,பாடி,உருண்டு,கடைசியாக விடைப்பெறும் நேரம் வர.பிறந்த வீட்டை விட்டு செல்ல மனவரா பிள்ளைப்போல் கனத்த இதயத்துடன் விடைப்பெற்றோம்.

(Shahdag  mountain to Quba)



மிக நீண்ட பயணத்திற்கு பிறகு அடைய வேண்டிய இடத்தை அடைந்தோம். யாரும் இல்லா ஏரி(Macara lake,Quba)கேட்பாரற்று உறங்கிக்கிடக்க .எங்களின் சிரிப்பொலி மற்றும் ஆட்டத்தில் எழுப்பி.யார் இவர்கள் என கலங்க செய்தோம்.





கடைசியாக தங்கும் விடுதியை அடைந்து(Quba),ஒரு குளியல் போடலாம் களைப்பு நீங்க என .புதுவிதமான பெயர்"டர்க்கிஷ் பாத்" என்னவென்றே தெரியாமல், கிணற்றடியில் குளிப்பது போல் குளித்து வந்து .சிரித்த சிரிப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத விடியலையும்,குளியலையும் தந்து அந்த நாளை நிறைவு செய்தது.

மீண்டும் இணைவோம் பயணத்தில்... 


1 comment:

  1. அருமையான படைப்பு. அதிலும் "பகலவன்.உண்மையிலேயே தினமும் அரங்கேறும் பிள்ளைப்பேறு. " அருமை வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...