புரட்டி பார்ப்பதை விட
புரிந்து பகிர்வதும்
பகிர்ந்து மகிழ்வதும்
மகிழ்ந்து பாராட்டுவதும்
பாராட்டி சிறப்பிப்பதும்
சிறப்பித்து புதைவதும்
புதைந்து உணர்வதும்
உணர்ந்த உண்மையின் படி நடப்பதும்
நடப்பது யாவும் நிலையில்லை என்று அறிவிற்கு கொண்டு செல்வதும்
செல்லும் மனதை கவர்வதும்
கவர்ந்த வாசகரை தன் வசப்படுத்துவதும்
வசப்பட்டதை அடிமையாக்குவதும்
அடிமையானதை நேர் வழியில் பயணிக்க வைப்பதும் ஒருவனே!
அவனும் புத்தகம் என்பவனே!

No comments:
Post a Comment