தெளிய வைத்தவனிடம் ஓர் கேள்வி
தெளிவில்லாத நான்
தெளிவான உன்னை
அருந்தியதும்
தெளிவு இழந்தது என் வயிறு
தெளிவானது என் அகம்
தெளிந்த வேளையில்
நான் தெளிவானதால்
தெளிவான பேச்சு என்னிடமிருந்து வர
தெளியாத நேரத்தில்
நான் சொன்னது தெளிவில்லாமல் போக
தெளிவான மனிதர்களும்
நான் தெளிந்த வேளையிலும் என்னை தெளிவாக
நிராகரிக்க
மீண்டும் தெளிவில்லாமல் போன நான் தெளிவான உன்னிடம் தஞ்சமானேன்
இப்போது என் கேள்வி நான் தெளிவாக இருக்கவா?
இல்லை
நான் தெளிவை இழக்கவா?
தெளிந்திருக்கும் நீயும் தெளிவாய் தெரிந்து கொள்ள
இன்னும் தெளிவாய் சொல்லவா?

No comments:
Post a Comment